Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுடுகாட்டில் பரபரப்பு.. 2 சடலங்களுக்கு கல்யாணம்.. ஒரே குழிக்குள் ஜோடியை புதைத்து.. என்னாச்சு..?

சுடுகாட்டில் காதல் ஜோடிக்கு திருமணம் நடந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

மும்பை: இரு வீட்டு பெற்றோர்களின் சம்மதப்படி, சுடுகாட்டில் ஒரு காதல் ஜோடிக்கு கல்யாணம் நடந்துள்ளது..!
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தின் வேட் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. வழக்கமாக சாதி பிரச்சனைதான் காதல் திருமணங்களில் தடையை ஏற்படுத்தும்..

அதுபோல இந்த திருமணத்திலும் சாதி பிரச்சனைதான் தலைதூக்கி உள்ளது.. ஆனால், வித்தியாசமான முறையில் தலைதூக்கி உள்ளது..

போலீஸ்

போலீஸ்

கடந்த ஆகஸ்ட் 1-ம்தேதி இந்த கிராமத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் ஒரு ஜோடி தூக்கு போட்டு கொண்டது.. அவர்கள் இருவரும் தூக்கில் தொங்குவதை பார்த்த அந்த கிராம மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.. போலீசாரும் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றினர்..

தற்கொலை

தற்கொலை

உயிரிழந்தவர்கள் இருவரும் காதல் ஜோடி என்பதும் பக்கத்தில் இருக்கும் பலாத் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.. அவர்கள் 22 வயது முகேஷ் சோனவானே, 19 வயது நேஹா தாக்கரே.. இருவரும் காதலித்து வந்தனர்.. திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.. தங்கள் விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்து சம்மதம் பெற முடிவெடுத்தனர்..

 ஒரே சாதி

ஒரே சாதி

முகேஷ் தன் பெற்றோரிடம் இதை பற்றி சொன்னதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.. காரணம், சாதி பிரச்சனைதான்.. இருவருமே ஒரே சாதியை மட்டுமல்ல ஒரே உட்பிரிவையும் சேர்ந்தவர்கள்... குறிப்பிட்ட சாதியின் வழக்கப்படி உட்பிரிவில் திருமணம் செய்வது கிடையாது என்பதுதான் பிரச்சனையே.. அதனால் 2 வீட்டிலுமே பெற்றோர்கள் ஒப்புக் கொள்ளவில்லை..

குட்பை

குட்பை

அதேசமயம், பிரிந்து வாழவும் முடியாமல், காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது.. பக்கத்து கிராமத்துக்கு வந்து மரத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு 2 பேரும் ஒன்றாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்வதற்கு முன்னர் முகேஷ் "குட் பை" என்று தன்னுடைய வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார்...

திருமணம்

திருமணம்

ஆனால், தற்கொலை குறித்து எந்த கடிதமும் இருவரும் எழுதி வைக்கவில்லை.. போலீசார் இந்த தற்கொலை குறித்து, அவரவர் வீட்டுக்கு தெரியப்படுத்தினார்கள்.. இரு தரப்பு குடும்பத்தினரும் சடலங்களை கண்டு கதறி கதறி அழுதனர்.. விருப்பப்படி கல்யாணம் செய்து வைக்க முடியாமல் போய்விட்டதே என்று கண்ணீர் விட்டனர்.. இதனையடுத்து இரு வீட்டாரும் பேசி, தற்கொலை செய்து கொண்ட தங்களது பிள்ளைகளின் ஆசையை சாவுக்கு பிறகாவது நிறைவேற்றி விடலாம் என்று முடிவு செய்தனர்.

மயானம்

மயானம்

அதன்படி, மயானத்தில் காதல் ஜோடிக்கு திருமண சடங்குகள் ஏற்படானது.. இரு வீட்டு குடும்பங்கள், உறவினர்கள் முன்னிலையில், திருமணமும் நடந்து முடிந்தது.. அனைத்து சடங்குகளையும் செய்த பிறகு,2 பேரையும் ஒரே குழியில் வைத்து புதைத்தனர்.. சுடுகாட்டில் நடந்த இந்த திருமணம் மகாராஷ்டிராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+