அலறும் சரத்பவார்- மகாராஷ்டிராவில் 13 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவுக்கு தாவும் என்சிபி அஜித் பவார்?
மும்பை: மகாராஷ்டிராவில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபடுவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகின்றன. சரத்பவாரின் உறவினரான அஜித் பவார் 13 என்சிபி எம்.எல்.ஏக்களுடன் பாஜகவுக்கு தாவ இருப்பதாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

மகாராஷ்டிராவில் 2019-ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக 105; சிவசேனா 63; சரத்பவாரின் என்சிபி 41; காங்கிரஸ் 44 இடங்களில் வென்றன. முதல்வர் பதவி விவகாரத்தில் சிவசேனா, பாஜக இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கால் நூற்றாண்டுகால சிவசேனா- பாஜக உறவு முறிந்தது. அப்போது சரத்பவாரின் என்சிபி கட்சியை பாஜக தம் பக்கம் இழுக்க முயற்சித்தது. சரத்பவாரின் உறவினரான அஜித் பவாரும் பாஜக பக்கம் போனார். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார்; அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். ஆனால் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்துக்குப் போனதால் பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து சிவசேனா தமது பரம எதிரிகளான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), காங்கிரஸுடன் இணைந்து புதிய கூட்டணி அமைத்தது. அப்போதே அஜித்பவார் என்சிபிக்கும் திரும்ப்விட்டார். முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-என்சிபி-காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்று வந்தது. பாஜகவோ சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மெஜாரிட்டி எம்.எல்.ஏக்களை இழுத்து உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்தது. தற்போது ஏக்நாத் ஷிண்டே முதல்வராகி உள்ளார். ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜக இணைந்து புதிய ஆட்சி நடைபெறுகிறது.
இந்தப் பின்னணியில் சிவசேனாவை உடைத்தது போல சரத்பவாரின் என்சிபியையும் சிதறவிட முடிவு செய்துள்ளது பாஜக. இப்போதும் அஜித் பவாரை அரவணைக்க தயாராகிவிட்டது பாஜக. அஜித் பவார் 2019-ல் சிங்கிள் எம்.எல்.ஏ.வாகத்தான் பாஜக பக்கம் போனார். இப்போது 13 எம்.எல்.ஏக்களை இழுத்துக் கொண்டு பாஜக பக்கம் ஓடப் போகிறாராம். ஆனால் சரத்பவாரோ, அப்படி எல்லாம் கட்சிக்கு துரோகம் செய்தால் எம்.எல்.ஏ. பதவி பறிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரித்திருந்தார். இந்த விவகாரம்தான் இப்போது மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications