அலறும் சரத்பவார்- மகாராஷ்டிராவில் 13 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவுக்கு தாவும் என்சிபி அஜித் பவார்?
மும்பை: மகாராஷ்டிராவில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபடுவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகின்றன. சரத்பவாரின் உறவினரான அஜித் பவார் 13 என்சிபி எம்.எல்.ஏக்களுடன் பாஜகவுக்கு தாவ இருப்பதாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

மகாராஷ்டிராவில் 2019-ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக 105; சிவசேனா 63; சரத்பவாரின் என்சிபி 41; காங்கிரஸ் 44 இடங்களில் வென்றன. முதல்வர் பதவி விவகாரத்தில் சிவசேனா, பாஜக இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கால் நூற்றாண்டுகால சிவசேனா- பாஜக உறவு முறிந்தது. அப்போது சரத்பவாரின் என்சிபி கட்சியை பாஜக தம் பக்கம் இழுக்க முயற்சித்தது. சரத்பவாரின் உறவினரான அஜித் பவாரும் பாஜக பக்கம் போனார். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார்; அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். ஆனால் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்துக்குப் போனதால் பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து சிவசேனா தமது பரம எதிரிகளான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), காங்கிரஸுடன் இணைந்து புதிய கூட்டணி அமைத்தது. அப்போதே அஜித்பவார் என்சிபிக்கும் திரும்ப்விட்டார். முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-என்சிபி-காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்று வந்தது. பாஜகவோ சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மெஜாரிட்டி எம்.எல்.ஏக்களை இழுத்து உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்தது. தற்போது ஏக்நாத் ஷிண்டே முதல்வராகி உள்ளார். ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜக இணைந்து புதிய ஆட்சி நடைபெறுகிறது.
இந்தப் பின்னணியில் சிவசேனாவை உடைத்தது போல சரத்பவாரின் என்சிபியையும் சிதறவிட முடிவு செய்துள்ளது பாஜக. இப்போதும் அஜித் பவாரை அரவணைக்க தயாராகிவிட்டது பாஜக. அஜித் பவார் 2019-ல் சிங்கிள் எம்.எல்.ஏ.வாகத்தான் பாஜக பக்கம் போனார். இப்போது 13 எம்.எல்.ஏக்களை இழுத்துக் கொண்டு பாஜக பக்கம் ஓடப் போகிறாராம். ஆனால் சரத்பவாரோ, அப்படி எல்லாம் கட்சிக்கு துரோகம் செய்தால் எம்.எல்.ஏ. பதவி பறிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரித்திருந்தார். இந்த விவகாரம்தான் இப்போது மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications