மகாராஷ்டிராவில் டென்ஷன்.. காங். ஆலோசனைக் கூட்டத்தில் 6 எம்.எல்.ஏக்கள் ஆப்சென்ட்- பாஜகவுக்கு எஸ்கேப்?
மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது முதலே காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர் தப்பி ஓடுவார்கள் என்கிற விவாதம் அம்மாநில அரசியலில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து கூட்டப்பட்ட காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 6 பேர் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது புதிய பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்தது பாஜக. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனாவின் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் பாஜகவை ஆதரித்தனர். இதனால் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகவும் நேரிட்டது.

இதனைத் தொடர்ந்து சிவசேனா யாருக்கு சொந்தம் என்ற சிக்கல் எழுந்தது. இது தொடர்பாக நீதிமன்றங்களிலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நடைபெற்றன. இறுதியாக ஏக்நாத் ஷிண்டேதான் உண்மையான சிவசேனா என தீர்ப்பு கிடைக்க உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவாகிப் போனது.
இதே பாணியில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸும் உடைக்கப்பட்டது. சரத்பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் தலைமையில் ஒரு கோஷ்டி பாஜகவை ஆதரித்தது. மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசிலும் பங்கேற்றது. தற்போது அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் தான் உண்மையான என தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக குறி வைத்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அசோக் சவாண் அண்மையில் பாஜகவுக்கு தப்பி ஓடினார். அவருக்கு தற்போது ராஜ்யசபா எம்பி சீட் கொடுத்துவிட்டது பாஜக. அசோக் சவாணுடன் மொத்தம் 12 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவப் போவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்த 6 பேரும் அசோக் சவான் பாணியில் பாஜகவுக்கு தாவக் கூடுமோ என்கிற பரபரப்பு நிலவி வருகிறது. ஆனால் அசோக் சவாண் இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறார். தாம் எந்த ஒரு எம்.எல்.ஏ.வையும் கூட்டிச் செல்லவில்லை என்கிறார் அசோக் சவாண். எப்ப பூகம்பம் வெடிக்குமோ?
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications