சிவசேனாவிற்கு ஷாக் தர ரெடியாகும் அமித் ஷா.. கூட்டணிக்கு கல்தா? மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது?
மகாராஷ்டிராவில் பாஜக சிவசேனா கூட்டணி உடைவதற்கு வாய்ப்பு உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக சிவசேனா கூட்டணி உடைவதற்கு வாய்ப்பு உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அங்கு பாஜக தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
மகாராஷ்டிராவில் மாநில சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. 288 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஆனால் இந்த தேர்தலில் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு வாக்களிக்கவில்லை.
மும்பையில் மட்டுமே கொஞ்சம் கொஞ்சம் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 56% வாக்காளர்கள் மட்டுமே நேற்று வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டணி ஆட்சி
மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணிதான் தற்போது ஆட்சியில் உள்ளது. பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலையும் சந்தித்தது. மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகள் உள்ளது. இதில் 124-ல் சிவசேனா போட்டியிடுகிறது. 164 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.

மாநில அரசு
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி 230+ இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. பாஜக மாபெரும் வெற்றியை இங்கு பெறும் என்று கணிப்புகள் தெரிவிக்கிறது.

காங்கிரஸ் கூட்டணி
அதேசமயம் காங்கிரஸ் கூட்டணிக்கு 48 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும். பிறருக்கு 10 தொகுதிகளில் மட்டும் வெற்றி கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் மீண்டும் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.

மாபெரும் வெற்றி
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகள் உள்ளது. இதில் 145 இடங்களில் வெற்றிபெற்றால் ஆட்சி அமைக்க முடியும். இந்த நிலையில் பாஜக இங்கு தனித்தே 148 இடங்களையோ அதை விட அதிக இடங்களையோ வெல்லும் என்று கணிப்புகள் தெரிவிக்கிறது.

சிவசேனா எப்படி
ஆம், இந்த முறை மகாராஷ்டிராவில் பாஜக கட்சி சிவசேனாவின் துணை இல்லாமலே ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இது சிவசேனா கட்சிக்கு தலைவலியை தர தொடங்கி உள்ளது.

முரண்பாடு
பாஜக சிவசேனா இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இருந்தாலும், பல விஷயங்களில் முரண்பாடான முடிவுகளை எடுத்துள்ளது. மொழி பிரச்சனை தொடங்கி பல விஷயங்களில் இரண்டு கட்சிக்கும் வேறு நிலைப்பாடு உள்ளது. அதேபோல் பிஎம்சி வங்கி பிரச்சனையில் சிவசேனா, பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

சில சண்டை
பல முறை பாஜக - சிவசேனா இடையே கடுமையான சண்டைகள் கூட வந்துள்ளது. அதனால் பாஜக தனிப்பெரும் கட்சியாக இந்த தேர்தலில் வெற்றிபெற்றால், சிவசேனாவை கூட்டு சேர்க்காமல் ஆட்சி செய்ய முயற்சிக்கும் என்கிறார்கள். பாஜக இது தொடர்பாக ஆலோசனை செய்ய உள்ளது.

என்ன நடக்கும்
அதே சமயம் இரண்டு கட்சியும் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தால் கூட, சிவசேனாவிற்கு முக்கிய அமைச்சர் பொறுப்பு எதுவும் கிடைக்காது. ஒருவேளை இப்போது கூட்டணி வைத்தால் கூட, எதிர்காலத்தில் கண்டிப்பாக பிரச்சனை வரும். அதனால் கூட்டணி உடையும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள் .
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications