நாட்டிலேயே மோசமான பாதிப்பு.. மகாராஷ்டிராவில் லாக்டவுன் மே 31ம் தேதி வரை நீட்டிப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் வரும் மே 31ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க ஏப்ரல் 24ம் தேதி நள்ளிரவு தொடங்கி மே 17ம் தேதியான இன்று வரை நாடு முழுவதும் பொதுமுடக்கம் ( லாக்டவுன்) அறிவிக்கப்பட்டது. இந்த பொது முடக்கம் இன்றுடன் 55 நாட்கள் அமலில் இருந்த நிலையில் மீண்டும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஏனெனில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 91 ஆயிரத்தை கடந்து விட்டது. சுமார் 2800க்கும் அதிகமானோர் இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இதில் நாட்டிலேயே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது மாகாராஷ்டிரா மாநிலம் தான். அங்கு 30700 பேர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1135 பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மும்பையில் மட்டும் 18555 பேர் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தானேவில் 3834 பேரும், புனேவில் 3647 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவுரங்காபாத், நாசிக், ராய்காட், சோலாபூர், பல்கார், ஜலோகான், அகோலா சதரா, அமராவதி உள்பட 13க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 100க்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை தடுக்க மேலும் 14 நாட்களுக்கு லாக்டவுனை நீட்டிக்க முடிவு செய்துள்ளது மகாராஷ்டிரா அரசு. இதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில வரும் மே 31 வரை லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பஞ்சாப், மிசோரம், தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே மாத இறுதி வரை ஊரடங்கை நீட்டித்த நிலையில் மகாராஷ்டிராவும் லாக்டவுனை நீட்டிக்க இப்போது முடிவு செய்துள்ளது
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications