ஜனநாயகத்தின் மீதான சர்ஜிகல் ஸ்டிரைக் இது.. கட்சிகளை உடைக்கிறது பாஜக.. உத்தவ் தாக்கரே பாய்ச்சல்
Recommended Video
மும்பை: கட்சிகளை உடைத்து ஆட்சியில் நீடிக்க பாஜக முயற்சி செய்கிறது என்றும் மகாராஷ்டிராவில் ஜனநாயகத்தின் மீது நடந்த சர்ஜிக்கில் ஸ்டிரைக் இது என்றும் உத்தவ் தாக்கரே பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
மகாராஷ்டிராவில், முதல்வர் பதவியை யார் பிரித்து கொள்வது என்பதில் கடந்த ஒரு மாதமாக நடந்த இழுபறிக்கு பிறகு இன்று பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
பாஜக, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைத்தன. மீண்டும் முதல்வராக தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக அஜித்பவாரும் பதவி ஏற்றனர்.

சரத்பவார்
இதனால், சிவசேனா, பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ள இந்த அரசியல் நிகழ்வு குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை விளக்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

குற்றச்சாட்டு
அதன்படியே இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது உத்தவ் தாக்கரே பேசும்போது, பாஜகமீது கடுமையான குற்றச்சாட்டுகளை பகிரங்கமாகவே முன் வைத்தார். அவர் சொன்னதாவது:

சர்ஜிக்கல் ஸ்டிரைக்
"கட்சிகளை உடைத்து ஆட்சியில் நீடிக்க பாஜக முயற்சி செய்கிறது மகாராஷ்டிராவில் ஜனநாயகத்தின் மீது நடந்த சர்ஜிக்கில் ஸ்டிரைக் இது. ஜனநாயகத்தின் மீதான தாக்குதலுக்கு மகாராஷ்டிர மக்கள் நிச்சயம் பழிதீர்ப்பார்கள். மகாராஷ்டிராவில் அரசியலமைப்பு கேலிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மக்கள் முன்னிலையிலேயே சிவசேனை அனைத்து முயற்சிகளையும் எடுத்தது

கேலிக்கூத்து
மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைக்க பாஜக எல்லா விதிகளையும் மீறியுள்ளது. ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி விட்டது பாஜக. ஹரியானா, பீகாரிலும் இதேபோலதான் அது செய்தது. தேர்தலே தேவையில்லை என்ற நிலையை உருவாக்கி வருகிறது பாஜக.

பெவிகால்
பதவி நாற்காலி மீது பெவிகால் தடவி அப்படியே அதிலேயே ஒட்டி இருந்து கொள்ளுங்கள். மக்கள் அளித்த தீர்ப்புக்கும், அரசியல் சாசனத்திற்கும் மிகப் பெரிய அவமரியாதையை தேடிக் கொடுத்து விட்டார் அஜீத் பவார். ஜனநாயகம் என்ற பெயரில் நடந்துள்ள இந்த விளையாட்டு கேலிக் கூத்தாகும்.

சிவசேனா
எல்லாவற்றையும் இரவோடு இரவாகவே செய்கிறது. ஒரு தனி மனித ஆதிக்கம் என்பது தவறானது. இதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும். சுயநல எண்ணம் கொண்டவர்கள். ஆனால் மக்கள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது. சட்டப்படி எல்லாமே நடக்கட்டும். அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டும். பாஜக சிவசேனாவை உடைத்தால் அதை சிவசேனா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அதைப் பார்த்து தூங்கிக் கொண்டிருக்க மாட்டோம்" என்றார்.
-
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு?












Click it and Unblock the Notifications