ஜனநாயகத்தின் மீதான சர்ஜிகல் ஸ்டிரைக் இது.. கட்சிகளை உடைக்கிறது பாஜக.. உத்தவ் தாக்கரே பாய்ச்சல்
Recommended Video
மும்பை: கட்சிகளை உடைத்து ஆட்சியில் நீடிக்க பாஜக முயற்சி செய்கிறது என்றும் மகாராஷ்டிராவில் ஜனநாயகத்தின் மீது நடந்த சர்ஜிக்கில் ஸ்டிரைக் இது என்றும் உத்தவ் தாக்கரே பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
மகாராஷ்டிராவில், முதல்வர் பதவியை யார் பிரித்து கொள்வது என்பதில் கடந்த ஒரு மாதமாக நடந்த இழுபறிக்கு பிறகு இன்று பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
பாஜக, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைத்தன. மீண்டும் முதல்வராக தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக அஜித்பவாரும் பதவி ஏற்றனர்.

சரத்பவார்
இதனால், சிவசேனா, பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ள இந்த அரசியல் நிகழ்வு குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை விளக்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

குற்றச்சாட்டு
அதன்படியே இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது உத்தவ் தாக்கரே பேசும்போது, பாஜகமீது கடுமையான குற்றச்சாட்டுகளை பகிரங்கமாகவே முன் வைத்தார். அவர் சொன்னதாவது:

சர்ஜிக்கல் ஸ்டிரைக்
"கட்சிகளை உடைத்து ஆட்சியில் நீடிக்க பாஜக முயற்சி செய்கிறது மகாராஷ்டிராவில் ஜனநாயகத்தின் மீது நடந்த சர்ஜிக்கில் ஸ்டிரைக் இது. ஜனநாயகத்தின் மீதான தாக்குதலுக்கு மகாராஷ்டிர மக்கள் நிச்சயம் பழிதீர்ப்பார்கள். மகாராஷ்டிராவில் அரசியலமைப்பு கேலிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மக்கள் முன்னிலையிலேயே சிவசேனை அனைத்து முயற்சிகளையும் எடுத்தது

கேலிக்கூத்து
மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைக்க பாஜக எல்லா விதிகளையும் மீறியுள்ளது. ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி விட்டது பாஜக. ஹரியானா, பீகாரிலும் இதேபோலதான் அது செய்தது. தேர்தலே தேவையில்லை என்ற நிலையை உருவாக்கி வருகிறது பாஜக.

பெவிகால்
பதவி நாற்காலி மீது பெவிகால் தடவி அப்படியே அதிலேயே ஒட்டி இருந்து கொள்ளுங்கள். மக்கள் அளித்த தீர்ப்புக்கும், அரசியல் சாசனத்திற்கும் மிகப் பெரிய அவமரியாதையை தேடிக் கொடுத்து விட்டார் அஜீத் பவார். ஜனநாயகம் என்ற பெயரில் நடந்துள்ள இந்த விளையாட்டு கேலிக் கூத்தாகும்.

சிவசேனா
எல்லாவற்றையும் இரவோடு இரவாகவே செய்கிறது. ஒரு தனி மனித ஆதிக்கம் என்பது தவறானது. இதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும். சுயநல எண்ணம் கொண்டவர்கள். ஆனால் மக்கள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது. சட்டப்படி எல்லாமே நடக்கட்டும். அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டும். பாஜக சிவசேனாவை உடைத்தால் அதை சிவசேனா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அதைப் பார்த்து தூங்கிக் கொண்டிருக்க மாட்டோம்" என்றார்.
-
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications