சிவசேனா ஆட்சிக்கு வந்தால் நோ புல்லட் ரயில்.. மொத்தமாக கைவிட பிளான்.. மத்திய அரசின் பரபர திட்டம்
மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தால், புல்லட் ரயில் திட்டத்தை பாஜக கைவிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தால், புல்லட் ரயில் திட்டத்தை பாஜக கைவிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.
இந்தியாவில் 2023க்குள் புல்லட் ரயிலை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ரயில் மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும், குஜராத்தின் அஹமதாபாத்துக்கும் இடையில் இயக்கப்படும்.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் இதுவாகும். இதன் முதற்கட்ட பணிகளை 2020க்குள் முடிக்கவும் அரசு யோசனை செய்து வருகிறது. இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கைவிட முடிவு
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சிக்கு பதிலாக சிவசேனா கட்சியின் ஆட்சி அமைய உள்ளது. அங்கு சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது. இதனால் மகாராஷ்டிராவில் மத்திய அரசு புல்லட் ரயில் திட்டத்தை கைவிட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

என்ன செலவு
1.60 லட்சம் கோடி இதற்கு செலவு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 1.10லட்சம் கோடி ரூபாயை ஜப்பான் அரசு கடனாக கொடுக்கிறது. ஜப்பான் அரசு மூலம் ''ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்'' வழங்கும் பணத்தில் ஜப்பான் ஊழியர்கள் இந்த புல்லட் ரயில் பாதையை போட இருக்கிறார்கள். மீதி பணத்தை மத்திய அரசு தரும்.

பெயர் வேண்டாம்
இதில் மாநில அரசு பணம் கொடுக்காது. ஆனாலும் சிவசேனா ஆட்சியின் கீழ் புல்லட் ரயில் வந்தால் , அவர்களின் கூட்டணிக்கு பெயர், புகழ் கிடைக்கும் என்று பாஜக நினைக்கிறது. இதனால் அந்த திட்டத்தை கைவிட பாஜக நினைப்பதாக தகவல்கள் வருகிறது. இல்லையென்றால் வேறு இரண்டு மாநிலத்திற்கு இடையில் திட்டத்தை மாற்றவும் வாய்ப்புள்ளது.

என்ன நிலம்
இதற்காக குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் சுமார் 1400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 1120 ஏக்கர் நிலம் தனியாருடையது. அதில் 900 ஏக்கர் நிலம் விவசாய நிலம். இதனால் பல ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட இருக்கிறார்கள். பலருடைய நிலம் ஏற்கனவே இதற்காக வாங்கப்பட்டுவிட்டது.

அரசு எதிர்ப்பு
இதனால் விவசாயிகளின் எதிர்ப்பை சம்பாதித்துவிட்டு, சிவசேனாவிற்கு பெயர் எடுத்து தரும் வகையில் ஒரு திட்டத்தை கொண்டு வர வேண்டாம் என்று பாஜக நினைப்பதாக கூறுகிறார்கள். இந்த திட்டத்தை கைவிடுவது தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறுகிறார்கள்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications