சட்டசபையில் செய்யுற காரியமா இது? செல்போனில் என்ன அது.. வசமாக சிக்கிய மகாராஷ்டிரா அமைச்சர்
மும்பை: மகாராஷ்டிராவில் சட்டசபையில் இருந்த அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், வேளாண் துறை அமைச்சருமான மானிக்ராவ் கோகதே ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அவரை பதவி விலக கோரி சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக, ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக உள்ளார். இந்த நிலையில் இன்று மகாராஷ்டிரா சட்டசபை கூடியது.

சுப்ரியா சுலே கருத்து
அப்போது சட்டசபை கூட்டத்தொடரின் போது, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், வேளாண் துறை அமைச்சருமான மானிக்ராவ் கோகதே ஆன்லைன் ரம்மி விளையாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் ஆன்லைன் ரம்மி விளையாடும் வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் வைரலான நிலையில், சட்டசபையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய அமைச்சர் மானிக்ராவ் கோகதே பதவி விலக வேண்டும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சரத்பவார் கட்சியை சேர்ந்த சுப்ரியா சுலே எம்பி கூறுகையில், "கடந்த 3 மாதத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் 750 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
விவசாயிகள் தற்கொலை
ஆனால் வேளாண் அமைச்சர் எந்த ஒரு கவலையுமின்றி ஆன்லைனில் ரம்மி விளையாடி கொண்டு இருக்கிறார். இந்த அவமானகரமான செயலுக்காக அவர் தனது அமைச்சர் பதவியினை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் அவரை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மந்திரி சபையில் இருந்து நீக்க வேண்டும்" என்றார்.
இதேபோல் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியை சேர்ந்த ரோகி பவார் எம்.எல்.ஏ கூறுகையில், "ஆளும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினால் பாஜகவோடு ஆலோசிக்காமல் எந்த ஒரு முடிவினையும் எடுக்க முடியவில்லை. இதனால் வேளாண் துறையில் பல்வேறு விஷயங்கள் கிடப்பில் உள்ளன. மாநிலத்தில் நாள்தோறும் 8 விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள்.
காங்கிரஸ், உத்தவ் சிவசேனா விமர்சனம்
ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், வேளாண் அமைச்சர் ஆன்லைன் ரம்மி விளையாடிக்கொண்டு இருக்கிறார் என்று கூறியுள்ளார். இதேபோல் காங்கிரஸ் தலைவரான விஜய் வடேடிவார் இது பற்றி கூறுகையில், விவசாயிகளை பற்றி கவலைப்படவில்லை. இந்த ஏமாற்று அரசு.. துரோக அரசுக்கு விவசாயிகள் பாடம் கற்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.
உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவை சேர்ந்த முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேகர், "அமைச்சர் மானிக்ராவ் கோகரே தவறு செய்வது இது முதல் முறை கிடையாது.. அவர் ஏற்கனவே சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியுள்ளார். அவரின் செயல் ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது" என்றார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications