மகாராஷ்டிராவில் குலைநடுங்க வைக்கும் கொரோனா- ஒரே நாளில் 2,786 பேருக்கு பாதிப்பு- 178 பேர் பலி
மும்பை: மகாராஷ்டிராவில் திங்கள்கிழமையன்று ஒரே நாளில் 2,786 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒரே நாளில் 178 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா படுமோசமாக தாக்கி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் கொரோனா மரணங்கள் நாள்தோறும் நூறுகளில் தொடர்கிறது. திங்கள்கிழமையன்று ஒரே நாளில் 2,786 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியானது. மேலும் 178 பேர் கொரோனாவால் மாண்டு போயினர்.
இதனையடுத்து மகாராச்டிராவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,10,744 ஆக அதிகரித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4128 ஆகவும் உயர்ந்துள்ளது.
டெல்லி மருத்துமனையில் அமித்ஷா அதிரடி விசிட்- சிசிடிவி கேமராக்கள், கேண்டீன்களை அதிகரிக்க உத்தரவு
மகாராஷ்டிராவின் மும்பையில் மட்டுமே 58,226 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இன்று மட்டும் மும்பையில் 1,066 பேருக்கு கொரோனா உறுதியானது. மும்பையில் 2,182 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.