சில மணி நேரம்தான் மிச்சமிருக்கு.. சிவசேனா என்ன முடிவு எடுக்கும்? மகாராஷ்டிராவில் கடைசி நேர பரபரப்பு
மகாராஷ்டிராவில் இன்னும் 8 மணி நேரத்திற்குள் ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு சிவசேனா கட்சி தள்ளப்பட்டுள்ளது.
மும்பை: மகாராஷ்டிராவில் இன்னும் 8 மணி நேரத்திற்குள் ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு சிவசேனா கட்சி தள்ளப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். இரண்டாவது பெரிய கட்சி என்பதால் சிவசேனாவிற்கு ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
சிவசேனாவிற்கு விருப்பம் இருந்தால் இன்று மாலைக்குள் ஆட்சி அமைப்பது தொடர்பாக உரிமை கோரி கடிதம் அளிக்கலாம் என்று ஆளுநர் பகத் சிங் குறிப்பிட்டு இருக்கிறார். பாஜகவில் ஆட்சி அமைக்க முடியாது என்று பாஜக கட்சி ஏற்கனவே கூறிவிட்டது.

புதிய கூட்டணி உருவாகும்
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளால் சிவசேனா என்ன செய்யும், இன்று இரவிற்குள் எப்படி ஆட்சி அமைக்கும். சிவசேனாவிற்கு யார் ஆதரவு தருவார்கள், என்று நிறைய கேள்விகள் எழுந்துள்ளது. இன்று மாலைக்குள் மகாராஷ்டிராவில் பல ஆலோசனை கூட்டங்கள் நடக்கும். கண்டிப்பாக புதிய கூட்டணி உருவாகும் என்றும் கூறுகிறார்கள்.

ஆப்ஷன் 1
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் சிவசேனாவிற்கு மூன்று ஆப்ஷன்கள் மட்டுமே இருக்கிறது. சிவசேனா நேரடியாக தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சேர்த்துவிட்டு, அவர்களுக்கு துணை முதல்வர் பதவியை கொடுத்துவிட்டு ஆட்சி அமைக்கலாம். ஆனால் இதற்கு சரத் பவார் ஒப்புக்கொள்வாரா என்பது தெரியவில்லை.

ஆப்ஷன் 2
அதற்கு அடுத்தபடியாக சிவசேனா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்யலாம். காங்கிரஸ் கட்சி ஏற்கனவே சிவசேனாவுடன் கூட்டணி வைத்த கட்சிதான். அதனால் அவர்களுடன் சேர்வது சிவசேனாவிற்கு எளிமையான முடிவாக இருக்கும். காங்கிரஸ் பெரிதாக எந்த கோரிக்கையையும் வைக்காது.

இன்னொரு ஆப்ஷன்
அதேசமயம் சிவசேனா ஐந்து வருடம் நிலையாக ஆட்சி செய்ய வேண்டும் என்றால் ஒரு கட்சியின் ஆதரவு இருந்தால் மட்டும் போதாது. கர்நாடகாவில் மஜத தலைவர் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது போல எப்போது வேண்டுமானாலும், சிவசேனா ஆட்சியும் கவிழலாம். அதனால் சிவசேனா காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இரண்டு கட்சியுடனும் கூட்டணி வைக்க முயற்சி செய்யும்.

முடிவு எடுப்பார்
அப்போதுதான் ஆட்சி கவிழாமல் நீடிக்கும். இதற்கான ஆலோசனைகளை மகாராஷ்டிராவில் மூன்று கட்சிகளும் மாறி மாறி செய்து வருகிறது. இன்னும் 8 மணி நேரம் கூட இல்லாத காரணத்தால் மகாராஷ்டிராவில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications