யாரென்று தெரிகிறதா! இதுதான் சிவசேனாவின் பலம்.. 162 எம்எல்ஏக்கள் முன்னிலையில் உத்தவ் தாக்கரே கர்ஜனை!
இதுதான் சிவசேனாவின் பலம்: இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும். எங்களின் வழியில் குறிக்கிடலாம் என்று இனியும் நினைக்காதீர்கள் என்று 162 எம்எல்ஏக்கள் முன்னிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசினார்.
Recommended Video
மும்பை: இதுதான் சிவசேனாவின் பலம்: இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும், எங்களின் வழியில் குறிக்கிடலாம் என்று இனியும் நினைக்காதீர்கள் என்று 162 எம்எல்ஏக்கள் முன்னிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசினார்.
மும்பை ஹயாத் ஹோட்டலில் இன்று சிவசேனா ஆதரவு எம்எல்ஏக்கள் அணிவகுப்பு நடத்தினார்கள். சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் மீடியா முன் அணிவகுப்பு நடத்தினார்கள். இதன் மூலம் அவர்கள் தங்கள் பெரும்பான்மையை நிரூபித்துள்ளனர்.
பாஜக தரப்பிற்கு சிவசேனாவின் இந்த அதிரடி நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் 162 எம்எல்ஏக்கள் முன்னிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசினார்.

என்ன பேசினார்
அதில், உங்களால் எங்களை யாராலும் பிரிக்க முடியாது. உங்களால் முடிந்தால் எங்களை பிரித்து பாருங்கள்.உங்களின் கேமராக்கள் மூலம் இத்தனை எம்எல்ஏக்களை படம் பிடிக்க முடியாது.அவ்வளவு எம்எல்ஏக்கள் இங்கு ஆதரவு தெரிவிக்க கூடி உள்ளனர்.

எங்கள் பலம்
இதுதான் சிவசேனாவின் பலம்: இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும். எங்களின் வழியில் குறிக்கிடலாம் என்று இனியும் நினைக்காதீர்கள். நாங்கள் வெறும் 5 வருடத்திற்காக இங்கு வரவில்லை. இன்னும் பல வருடங்களுக்கு நாங்கள் மகாராஷ்டிராவை ஆட்சி செய்ய போகிறோம்.

இப்படி செய்யவில்லை
நாங்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்று இப்படி செய்யவில்லை. அதிகாரத்திற்கு ஆசைப்படவில்லை. ஆனால் சிலரை தோல்வி அடைய செய்ய வேண்டும். சில அதிகார துஷ்பிரயோகத்தை தோல்வி அடைய செய்ய வேண்டும். இது சாத்தியத்திற்கான போராட்டம்.

போராட்டம்
இந்த போராட்டத்தில் நாங்கள்தான் வெற்றிபெறுவோம். நாங்கள் பாஜகவின் தலையை குறி வைப்போம். இதற்கு பின் இருக்கும் எல்லோரையும் நாங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்., என்று உத்தவ் தாக்கரே குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications