மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாளை காலை 8 மணிக்கு மகாராஷ்டிரா சிறப்பு சட்டசபை கூட்டம் தொடக்கம்.. ஆளுநர் உத்தரவு! காரணம் இதுதான்

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை நடைபெறுகிறது. ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் நாளை பட்னாவிஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மாலை 5 மணிக்குள் இது நடக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு. ஆனால், போதிய பெரும்பான்மை இல்லை என்பதை உணர்ந்துள்ள பட்னாவிஸ் தனது முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். எனவே அவர் காபந்து முதல்வராக தொடருகிறார்.

Maharashtra: Tomorrow the first session of new assembly begin

இதனிடையே, உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று, இடைக்கால சபாநாயகரை அறிவித்துள்ளார் ஆளுநர் கோஷ்யாரி. பாஜகவை சேர்ந்த காளிதாஸ் கொலம்ப்கர் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நாளை காலை 8 மணிக்கு மகாராஷ்டிரா சட்டசபையின் சிறப்பு கூட்டம் தொடங்கும் என ஆளுநர் இன்று மாலை உத்தரவு வெளியிட்டுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறப்போவதில்லை. ஆனால், அக்டோபர் 24ம் தேதி மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாகிய போதிலும், இதுவரை, எம்எல்ஏக்கள் பதவியேற்கவில்லை. எனவே, காலை 8 மணிக்கு, எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா.. பாஜக சீனியர் எம்எல்ஏ காளிதாஸ் கொலம்ப்கர் இடைக்கால சபாநாயகராக நியமனம்!மகாராஷ்டிரா.. பாஜக சீனியர் எம்எல்ஏ காளிதாஸ் கொலம்ப்கர் இடைக்கால சபாநாயகராக நியமனம்!

இதைத்தொடர்ந்து மும்பையில், சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி சார்பில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே முதல்வராக பதவியேற்க உள்ளார். எனவே, இந்த சிறப்பு சட்டசபை கூட்டம் என்பது, எம்எல்ஏக்கள் பதவியேற்புக்காக மட்டுமே என்று தெரிகிறது.

English summary
Protem Speaker Kalidas Kolambkar: Tomorrow the first session of new assembly begins. From 8.00 am onwards oath will be administered to the MLAs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X