மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு!
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி நிலையான ஆட்சி அமைக்கும் என்று அம்மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பிரித்திவிராஜ் சவான் தெரிவித்துள்ளார்.
மும்பை: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி நிலையான ஆட்சி அமைக்கும் என்று அம்மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பிரித்திவிராஜ் சவான் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்று இரண்டாவது முறையாக அறிவித்துவிட்டது. அங்கு தற்போது சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளது. இன்னொரு பக்கம் பாஜகவுடன் சேரவும் சிவசேனா முயன்று வருகிறது.
இதனால் மகாராஷ்டிராவில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது. மகாராஷ்டிரா அரசியலில் நிலவி வந்த பிரச்சனை இன்னும் முடிவிற்கு வரவில்லை.

என்ன பேட்டி
இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து அம்மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பிரித்திவிராஜ் சவான் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நாங்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இன்று இறுதிக்கட்ட ஆலோசனை நடக்கும்.

நாளை முடிவு
நாளை இது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்போம். நாளை சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து ஆலோசனை செய்யும். மகாராஷ்டிரா அரசியலில் நிலவி வந்த பிரச்சனை விரைவில் முடிய போகிறது. இது தற்காலிகம்தான்.

காங்கிரஸ் கூட்டணி
இங்கு விரைவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அமைக்கும். பாஜக இங்கு மீண்டும் ஆட்சி அமைக்காது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி கண்டிப்பாக நிலையான ஆட்சியை அமைக்கும். அதற்கு நாங்கள் உறுதி கொடுக்கிறோம்.

எங்கள் நிலைப்பாடு
எங்களின் நிலைப்பாடு தொடர்பாக சில சிவசேனா உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர்கள் இது தொடர்பாக தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள். நாளை மாலைக்குள் அனைத்து விதமான சந்தேகங்களும் தீர்க்கப்படும் என்று பிரித்திவிராஜ் சவான் தெரிவித்துள்ளார்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications