நாளை ஆளுநர்கிட்ட தரணும்.. லெட்டர் தாங்க.. நைஸாக பேசி வாங்கிய அஜித் பவார்.. அன்று இரவு நடந்த சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. அஜீத் பவார் பிரிந்து வர இதுதான் காரணமா?

    மும்பை: பாஜகவிற்கு ஆதரவாக அஜித் பவார் கொடுத்த 53 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் எப்படி அவருக்கு கிடைத்தது? இதற்கு பின் நடந்த குளறுபடி என்ன என்ற உண்மை தற்போது வெளியாகி உள்ளது.

    மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். நேற்று அதிகாலை இந்த அதிரடி திருப்பம் நடந்தது.

    இதுதான் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மகாராஷ்டிராவில் பாஜகவிற்கு அஜித் பவார் ஆதரவு அளித்தாலும் கூட பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. பாஜகவிற்கு பெரும்பான்மையை நிரூபிக்க நவம்பர் 30 வரை நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆட்சி

    ஆட்சி

    இந்த நிலையில் அஜித் பவார் ஆட்சி அமைப்பதற்காக ஆளுநரிடம் ஆதரவு கடிதம் ஒன்றை அளித்து இருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 53 பேரின் ஆதரவும் இந்த கடிதத்தில் இடம்பெற்று உள்ளது. இதை பார்த்த பின் அவர் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை வாபஸ் செய்ய சொல்லிவிட்டு பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார் என்கிறார்கள்.

    எப்படி கடிதம்

    எப்படி கடிதம்

    ஆனால் இந்த கடிதம் எப்படி அஜித் பவாருக்கு கிடைத்தது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பலருக்கும் தெரியவில்லை. அஜித் பவார் முக்கியமான தலைவர் என்றாலும் அவர் இதுபோன்ற அதி முக்கியமான பணிகளை செய்வது கிடையாது. சரத் பவார்தான் இது போன்ற கடிதங்களை வைத்து இருப்பார்.

    யார் அவர்

    யார் அவர்

    இதற்காக அவர் கட்சியில் சிவாஜிராவ் கார்ஜி என்ற நபரை நியமித்துள்ளார். தற்போது இவர் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார். இதற்கு உன் ஐஏஎஸ்ஆக இருந்தவர் சரத் பவார் உடனான நட்பால் கட்சிக்குள் வந்து, தற்போது பொதுச்செயலாளராக இருக்கிறார்.

    கடிதத்தை வைத்து இருந்தார்

    கடிதத்தை வைத்து இருந்தார்

    அவர்தான் இந்த கடிதத்தை வைத்து இருந்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அஜித் பவாரிடம் அவரிடம் சென்று கடிதத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. நாளை சிவசேனா உடன் ஆட்சி அமைக்க வேண்டும். அப்போது கடிதம் தேவைப்படும். அதனால் கொடுங்கள் என்று அவர் வாங்கி இருக்கிறார்.

    மறுநாள் என்ன நடந்தது

    மறுநாள் என்ன நடந்தது

    அதன்பின் மறுநாள் அதிகாலை அதே கடிதத்தை வைத்து அவர் பாஜகவிற்கு ஆதரவு அளித்துள்ளார். இப்படித்தான் சரத் பவார் மூலம் கடிதம் சிவாஜிராவிற்கு சென்று அங்கிருந்து அஜித் பவா-ருக்கு சென்று உள்ளது. இதன் மூலம்தான் ஒரே இரவில் அரசியல் மொத்தமாக மாறியுள்ளது என்கிறார்கள்.

    தேசியவாத காங்கிரஸ்

    தேசியவாத காங்கிரஸ்

    அதே போல் இன்னொரு பக்கம் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கடிதத்தை அஜித் பவார் அளிக்கவே இல்லை. அவர் பொய் சொல்கிறார். ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்று ஆளுநரும் பொய் சொல்கிறார் என்று தேசியவாத காங்கிரசில் சிலர் புகார் வைத்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+