மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செக்ஸுக்காக நச்சரித்த பெண்: தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட ஆண்

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    செக்ஸ் தொல்லை தாங்காமல் ஆண் தற்கொலை

    மும்பை: மகராஷ்டிராவில் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு பெண் ஒருவர் தொல்லை கொடுத்ததால் திருமணமான ஆண் தற்கொலை செய்து கொண்டார்.

    மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர் சச்சின் மித்காரி(38). அவர் பர்பானியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வேலை செய்து வந்தார்.

    Man commits suicide after woman colleague pesters him for sex

    அதே மருத்துவமனையில் வேலை செய்யும் பெண் ஒருவர் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு சச்சினுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவரின் தொல்லை தாங்க முடியாமல் சச்சிந் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவர் தூக்கில் பிணமாகத் தொங்கியதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து சச்சினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    [நடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. திடீரென வாபஸ் பெற்றார் நடிகை ராணி]

    சச்சின் தற்கொலை செய்யும் முன்பு எழுதி வைத்த கடித்தத்தில் கூறியிருப்பதாவது,

    நான் திருமணமானவன் என்று தெரிந்தும் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு என்னுடன் பணிபுரியும் பெண் ஒருவர் தொல்லை கொடுக்கிறார். அவருடன் உறவு வைக்கவில்லை என்றால் கிரிமினல் கேஸ் போடுவேன் என்று மிரட்டுகிறார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    சச்சினை தற்கொலைக்கு தூண்டியதாக அந்த பெண் மீது போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    English summary
    A 38-year-old man has hanged himself to death after a woman colleague pestered him to have sexual relationship with her.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X