மராத்தி பேசுவோர் வசிக்கும் கர்நாடகா பகுதிகளை யூனியன் பிரதேசமாக்க உத்தவ் தாக்கரே திடீர் கோரிக்கை
மும்பை: கர்நாடகாவில் மராத்தி மொழி பேசுவோர் வசிக்கும் பகுதிகளை ஒருங்கிணைத்து தனி யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கோரிக்கை வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா எல்லையில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. இது தொடர்பாக இரு மாநிலங்களில் நடைபெற்றும் போராட்டங்களால் பதற்றம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடகா- மகாராஷ்டிரா மாநில எல்லைகள் பிரச்சனை தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:

பெல்காம் பெயர் மாற்றம்
கர்நாடகாவுடனான எல்லை பிரச்சனைகள் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதே பெல்காமின் பெயரை கர்நாடகா அரசு மாற்றியிருக்கிறது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா?

சட்டசபை கட்டிடம்
பெல்காமின் பெயரை மாற்றியது மட்டும் இல்லாது அதை 2-வது தலைநகராகவும் கர்நாடகா அரசு அறிவித்திருக்கிறது. அங்கே சட்டசபை கட்டிடத்தை கட்டி சட்டசபை கூட்டத்தையும் கர்நாடகா அரசு நடத்தியிருக்கிறது. இது நீதிமன்ற அவமதிப்புக்குள் வராதா?

யூனியன் பிரதேச கோரிக்கை
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை கர்நாடகா ஆக்கிரமித்திருக்கும் மராத்தி மொழி பேசுவோர் வசிக்கும் பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும். கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு நாங்கள் வெல்வோம். கர்நாடகா ஆக்கிரமித்திருக்கும் மராத்தி மொழி பேசும் பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைத்தே தீருவோம்.

மகா. அமைப்பு மீது சாடல்
மகாராஷ்டிரா ஏக்கிரான் சமிதி பல எம்.எல்.ஏக்களை அந்த பகுதியில் பெற்றிருந்தது. இந்த அமைப்பை பலவீனமாக்கக் கூடாது என்பதற்காக அங்கே சிவசேனா அரசியல் செய்யாமல் இருந்தது. ஆனால் சுயநல அரசியலுக்காக மராத்தி மொழி பேசும் மக்களின் கோரிக்கைகளை அது நீர்த்து போகச் செய்துவிட்டது.

மராத்தியர்கள் மீது ஒடுக்குமுறை
மகாராஷ்டிராவில் அமைந்துள்ள மகா விகாஸ் அகாடி அரசு காலத்தில்தான் இந்த எல்லை பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். இந்த அரசின் ஆட்சிக் காலத்துக்குள் எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் போனால் எப்போதும் தீர்வு காணவே முடியாது. கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மராத்தி மொழி பேசும் மக்களை ஒடுக்கவே செய்கின்றனர். இதற்கு நாங்களே தீர்வு காண்போம். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலி! பலருக்கு தீவிர சிகிச்சை! மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications