மகாராஷ்டிரா கூட்டுறவு துறை ஊழல்: சர்க்கரை ஆலை விவகாரத்தில் மனைவியுடன் சிக்கிய அஜித்பவார்!
மும்பை: மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி ஊழல் விவகாரத்துடன். மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாருக்கு சொந்தமான சர்க்கரை ஆலை உள்பட ரூ .65 கோடிக்கு மேற்பட்ட சொத்துக்களை அமலாக்கத்துறை இணைத்துள்ளது.
அமலாக்கத்துறை மோசடி குற்றச்சாட்டில் சேர்த்துள் ரூ .65.75 கோடி மதிப்புள்ள ஜரண்டேஷ்வர் சாகரி சர்க்கரை ஆலை குரு கமாடிட்டி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் உள்ளன. ஜரண்டேஷ்வர் சுகர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது,

ஸ்பார்லிங்க் பிரைவேட். லிமிடெட் நிறுவனம் தான் ஜரண்டேஷ்வர் சுகர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கிறது. என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஸ்பார்லிங்க் பிரைவேட். லிமிடெட் நிறுவனம் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மற்றும் அவரது மனைவி சுனேத்ரா அஜித் பவார் ஆகியோருடன் தொடர்புடைய நிறுவனம் "என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தனக்கு எந்த அறிவிப்பும் அமலாக்கத்துறையிடம் இருந்து கிடைக்கவில்லை என்று அஜித் பவார் தெரிவித்துள்ளார். சதாரா மாவட்டத்தில் உள்ள ஜரேண்டேஷ்வர் சர்க்கரை ஆலை குறித்த அமலாக்கத்துறையின் அறிக்கையையும் மறுத்தார்.
முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டில் மும்பை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் பதிவு செய்த எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் அஜித்பவார் மீது அமலாக்கத்துறை விசாரணைகளைத் தொடங்கி நடத்தி வருகிறது.
மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி குறைந்த விலைக்கு 2010 ஆம் ஆண்டில் ஜரண்டேஷ்வர் சஹாரி சர்க்கரை ஆலையை குறைந்த விலைக்கு ஏலம் விட்டது.ஏலத்தை உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் நடத்தியது என்று அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. இந்த ஆலையைத்தான் துணை முதல்வர் அஜித் பவார் வேறு ஒரு நிறுவனம் மூலம் வாங்கியதாக குற்றம்சாட்டி உள்ளது அமலாக்கத்துறை.












Click it and Unblock the Notifications