அம்பானி வீட்டருகே வெடிபொருட்கள் நிரப்பிய கார் நின்ற விவகாரம்: மும்பை போலீஸ் கமிஷனர் பணியிட மாற்றம்!
மும்பை: மும்பையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் பங்களா அருகே 'ஜெலட்டின்' குச்சிகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு நடந்து வரும் நிலையில் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பிர் சிங் இட மாற்றம் செய்யப்பட்டார்.
மஹாராஷ்டிராவின் தெற்கு மும்பையில் வசித்து வரும் தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் பங்களா அருகே 'ஜெலட்டின்' குச்சிகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

அதில் அம்பானிக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட கடிதம் கைப்பற்றப்பட்டது. இதற்கிடையே அந்த காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரன் என்பவர் மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கையே விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பினர் மும்பையைச் சேர்ந்த, உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸே என்பவரை கைது செய்தனர். சச்சின் வாஸேவை சில அதிகாரிகள் பின்னால் இருந்து இயக்குவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு தெரிய வந்தது.
இந்த வழக்கில் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பிர் சிங் என்பவரை விசாரணை வளையத்தில் கொண்டு வர என்.ஐ.ஏ.அதிகாரிகள் திட்டமிட்டனர். இதனை தொடர்ந்து பரம்பிர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசினார்.
இதன்பின்னர் பரம்பிர் சிங் மும்பை போலீஸ் கமிஷனர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக ஹேமந்த் நாக்ரலே என்பவர் கமிஷனராக நியமிக்கப்பட்டார். பரம் பிர் சிங் உள்துறை காவலர் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications