ஜொலி ஜொலிப்பு! முகேஷ் அம்பானியின் அன்டீலியா வீட்டை பார்த்தீர்களா? ஊரெல்லாம் இதுதான் பேச்சு
மும்பை: இந்திய பணக்காரரான முகேஷ் அம்பானியின் 27 அடுக்கு குடியிருப்பான அன்டீலியாவில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜெய்ஸ்ரீராம் என்றும் கோயிலின் மாதிரியும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக மேலாளரான முகேஷ் அம்பானி, இந்திய பணக்காரர்களுள் ஒருவர் ஆவார். அவருக்கு சொந்தமாக உலகிலேயே இரண்டாவது விலை உயர்ந்த வீடாக கருதப்படும் அன்டீலியா என்ற பெயரிலான வீடு மும்பையில் உள்ளது.

இது மொத்தம் 27 மாடிகளை கொண்டது. முகேஷ் அம்பானி தனது மனைவி நீடா அம்பானிக்காக கட்டப்பட்ட காதல் கோட்டை என்றே சொல்லலாம். 2011 ஆம் ஆண்டு இந்த வீட்டிற்கு வந்தனர். இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு மட்டும் ரூ 25 ஆயிரம் கோடியாகும். விண்ணை முட்டும் அளவுக்கு மிகவும் உயரமான இந்த கட்டடம் 568 அடி அதாவது 173 மீட்டர் உயரம் கொண்டது. இதன் மொத்த பரப்பளவு 4 லட்சம் சதுர அடியாகும்.
இங்கு 168 கார் ரிப்பேர் செய்யும் கடைகள் உள்ளன. வீட்டு விசேஷங்களை நடத்துவதற்கு ஒரு பெரிய ஹால் இருக்கிறது. 50 பேர் உட்கார்ந்து பார்க்கும் தியேட்டர், மாடி தோட்டங்கள், நீச்சல் குளம், ஸ்பா, மருத்துவமனை, கோயில் உள்ளிட்டவை இருக்கின்றன. அது போல் இங்கு பனி அறை உள்ளது. இந்த அறையில் சுவற்றில் இருந்து பனி உருகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 8 அளவு நிலநடுக்கம் வந்தாலும் இந்த கட்டடம் உறுதித்தன்மையுடன் இருக்கும். உலகின் மிகவும் விலை மதிப்புள்ள கட்டடமாக இது கருதப்படுகிறது. இங்கு 9 அதிவேக லிப்ட்கள் உள்ளன. மேலும் இந்த கட்டடத்தில் பணியாற்றுவோருக்கென தனி அறைகள் உள்ளன. 2010 ஆம் ஆண்டே இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டாலும் 2011 ஆம் ஆண்டுதான் அம்பானி குடும்பம் குடியேறியது.
இப்படி சிறப்பு வாய்ந்த அன்டீலியா வீட்டில் வசித்து வரும் முகேஷ் அம்பானியும் நீடா அம்பானியும் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோயிலில் பால ராமர் பிரதிஷ்டை செய்யப்படும் நிலையில் ஜெய்ஸ்ரீராம் என அன்டீலியா வீட்டில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ராமர் கோயில் கோபுரத்தின் மாதிரியும் ஹாலோகிராம்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்வையொட்டி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களான மும்பை, ஜாம்நகர், நகோதானே, நாக்பூர், காக்கிநாடா, சில்வசா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அது போல் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தினரும் கலந்து கொள்ள இன்று அவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications