Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்.. பெங்களூர்-மும்பை நெடுஞ்சாலை முடக்கம்! ஒரு கார் கூட நகரல.. பதற்றம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், பெங்களூர்- மும்பை நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிராவில் பெரும்பான்மையாக உள்ள மராத்தா பிரிவினர் நீண்ட காலமாக தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பில் அவர்கள் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 Mumbai Bangalore highway blocked as Maratha quota stir intensifies

கடந்த 2018இல் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தில் இதில் 10 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அப்போது இருந்து மகாராஷ்டிரா பாஜக அரசு இட ஒதுக்கீடு வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மராத்தா இட ஒதுக்கீடு: இருப்பினும், உச்சநீதிமன்றம் இதை ரத்து செய்தது. இதனால் அங்குள்ள மராத்தா பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்காமலேயே இருந்தது. இதற்கிடையே மராத்தாவுக்கு இட ஒதுக்கீட்டை அக். 24ஆம் தேதிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கெடு விதித்திருந்தனர். இருப்பினும் இட ஒதுக்கீடு வழங்கப்படாத நிலையில், மீண்டும் மராத்தா பிரிவினர் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். சமூக செயற்பாட்டாளர் மனோஜ் ஜரங்கே பாட்டீல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

இதற்கிடையே இப்போது மராத்தா பிரிவினர் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மும்பை- பெங்களூரு நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளதால் அங்கே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது நாட்டில் இருக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக இருக்கும் நிலையில், போராட்டத்தால் அங்கே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் வாகனங்கள் வரிசைகட்டி நிற்கிறது. இருப்பினும், போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடத் தாயாராக இல்லை என்று அறிவித்துள்ளனர்.

ரயில் மறியல்: அதேபோல அங்குள்ள மராட்டிய கிராந்தி மோர்ச்சா என்ற அமைப்பினர் சோலாப்பூரில் ரயில் மறியல் போராட்டத்திலும் இறங்கினர். அவர்கள் ரயில் தண்டவாளத்தில் டயர்களை எரித்து போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டம் தொடர்பாக ராம் ஜாதவ் மற்றும் நிஷாந்த் சால்வே என இருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவர்களை ரயில் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

இதற்கிடையில், மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில், ஒரு கும்பல் பஞ்சாயத்து அலுவலகத்தில் தீ வைத்துள்ளனர். மராத்தா இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய அவர்கள், அலுவலகத்திற்கு தீ வைத்துள்ளனர். அப்போது அலுவலகத்தின் இரண்டு அறைகளில் இருந்த சில முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 Mumbai Bangalore highway blocked as Maratha quota stir intensifies

தீவிரமடையும் போராட்டம்: இதே ஜல்னாவில் நடந்த மற்றொரு சம்பவத்தில், பத்னாபூர் தாலுகாவின் ஷெல்கான் கிராமத்தில் உள்ள ரயில்வே கேட்டில் மராத்தா சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ரயில் மறியலில் ஈடுபட முயன்றுள்ளனர்.. போராட்டக்காரர்கள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களையும் போலீசார் அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.

இதற்கிடையே மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தில் நேற்றைய தினம் மகாராஷ்டிவாரின் பீட் மாவட்டத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ பிரகாஷ் சோலங்கேவின் வீட்டிற்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். சோலங்கேவின் வீட்டிற்கு வெளியே திரண்ட போராட்டக்காரர்கள், முதலில் அவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர். பின்னர், அங்கிருந்த வாகனத்தின் மீது கற்களை வீசிய போராட்டக்காரர்கள், வீட்டை தீ வைத்து எரித்துள்ளனர். இப்படி நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+