Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணியாளரின் ஆடைகளை களைந்து சித்ரவதை.. நாக்கால் ஷுவை சுத்தம் செய்ய வைத்த கொடூரம்.. தடதடத்த மும்பை

Subscribe to Oneindia Tamil

மும்பை: கடையில் ஏலக்காய் திருடியதாக கூறி பணியாளரை தாக்கி ஆடைகளை கழற்றி சித்ரவதை செய்ததோடு நாக்கால் ஷுவை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் உள்ள ஏபிஎம்சி மார்க்கெட்டில் மளிகை பொருள் விற்கும் கடை நடத்தி வருபவர் தயாலாஜிபாய் பானுஷாலி. இவரது கடையில் தினமும் கூட்டம் அலைமோதும்.

Mumbai man stripped and forced to Lick Shoes for allegedly stealing cardomom from Shop

இதனால் கடையில் சில பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் கடையில் இருந்து ஏலக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்கள் மாயமானதாக கூறப்படுகிறது.

தயால்ஜிபாய் பானுஷாலிக்கு கடையில் பணியாற்றும் பணியாளர் ஒருவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அந்த பணியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தயால்ஜிபாய் பானுஷாலி மற்றும் அவரது கடையில் பணியாற்றும் சஞ்சய் சவுத்ரி லாலாஜி பாபுபாய் பாகி, வீரேந்திர குமார் லட்சமண் கவுதம், யோகேஷ், கரண் உள்ளிட்டவர்கள் அவரை தாக்கினர்.

மேலும் அவர்கள் அந்த பணியாளரின் ஆடைகளை களைந்து ஆபாசமாக பேசி திட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி அந்த பணியாளரை வலுக்கட்டாயப்படுத்தி கடை உரிமையாளர் தயால்ஜிபாய் பானுஷாலியின் ஷுவை நக்கி சுத்தம் செய்ய வைத்து சித்ரவதை செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை அவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தான் பாதிக்கப்பட்ட நபர் சம்பவம் தொடர்பாக போலீசில் புகாரளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+