வேகமாக வெளியேறுங்கள்.. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அரசு.. மும்பையில் தொடரும் தீவிர கனமழை!
மும்பையில் இன்று அதி தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருப்பதால் அங்கு இருக்கும் மக்கள் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video
மும்பை: மும்பையில் இன்று அதி தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருப்பதால் அங்கு இருக்கும் மக்கள் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே, மஹாராஷ்டிராவில் தீவிரமாக மழை பெய்து வருகிறது. அதிலும் கடந்த நான்கு நாட்களாக மும்பையில் மிக தீவிரமான மழை பொழிந்து வருகிறது.
மும்பையில் இதனால் மொத்தமா இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு இதேபோல் தீவிரமாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை எப்படி
மும்பையில் கடந்த மூன்று நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ளூர் போக்குவரத்து மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. 11 விமானங்கள் இதுவரை மொத்தமாக சேவை துண்டிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் உள்ளூர் ரயில் சேவை மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது.

எப்படி துண்டிப்பு
மழை நீர் சாலை முழுக்க தேங்கி இருப்பதால், மும்பையில் இருக்கும் பல பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீட்பு படையை சேர்ந்த யாரும் செல்ல முடியாத அளவிற்கு சியான், மாதுங்கா, மஹீம் , அந்தேரி, மலாட், தாஹிசார் ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளது.

மீட்பு படை
இங்கு தற்போது தேசிய பேரிடர் மீட்பு படையினர் களமிறங்கி மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். மும்பையில் நேற்று இரவு முழுக்க மழை பெய்தது. நேற்று பல இடங்களில் 200 செமிக்கும் அதிகமாக மழை பெய்தது. அந்தேரி பகுதியில் 225 செமிக்கும் அதிகமாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

இன்றும் பெய்யும்
மும்பையில் இன்று அதிதீவிர கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மும்பைக்கு இன்றும் நாளையும் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதும் அங்கு தீவிரமாக மழை பெய்து வருகிறது.

என்ன எச்சரிக்கை
மும்பையில் இன்று அதி தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருப்பதால் அங்கு இருக்கும் மக்கள் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை வேகமாக அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறும்படி மும்பை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது .












Click it and Unblock the Notifications