கடலாக மாறிய மும்பை ஏர்போர்ட்.. கப்பலாக மாறிய விமானங்கள்.. வீடியோ!
மும்பை: மும்பையில் பெய்த கனமழை காரணமாக மும்பை விமான நிலையம் கடலாகவும், அங்கு நிறுத்தப்பட்டுள்ள விமானங்கள் கப்பலாகவும் மாறி இருக்கிறது. கனமழை காரணமாக சுமார் 250 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதோடு, விமான நிலையத்தின் ரன் வே முழுக்க மழைநீர் தேங்கி நிற்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் மும்பைக்கு ரெட் அலர்ட் வார்னிங் கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கியது. நேற்று மட்டும் 8 மணி நேரத்தில் 177 செமீ மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் ஊழியர்கள் பலரும் ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மும்பையில் பெய்த கனமழை காரணமாக 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழைக்கு மும்பை விமான நிலையமும் தப்ப முடியவில்லை.
Looks like Mumbai airport is having a Poseidon adventure @CSMIA_Official #aviation #avgeeks #MumbaiRains
— Sanjay Lazar (@sjlazars) August 19, 2025
🎥 ABella pic.twitter.com/LoxJO9LuDD
கனமழை காரணமாக சுமார் 250 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மும்பை விமான நிலையத்தின் ரன் வே முழுக்க மழைநீர் தேங்கி நிற்பதால், மும்பை விமான நிலையமே கடல் போலவும், அங்கு நிறுத்தப்பட்டுள்ள விமானங்கள் கப்பல் போலவும் காட்சி அளிக்கின்றன. அதேபோல் மும்பையின் கோரேகான் ஓபராய் மால் முன்பாக தேங்கி நிற்கும் மழைநீரில் சிறுவர்கள் நீச்சல் அடித்து வருகின்றனர்.
🚨 In #Thane, two locals bravely swam through a flooded underpass to rescue two people trapped in a car.#Mumbai #Rains #Flooded #Waterlogged #MumbaiRains pic.twitter.com/oFNTa13E3l
— ChaiAndTweets (@ChaiAndTweets) August 19, 2025
மும்பையின் மிகமுக்கியமான பகுதியான அந்த மால் முன்பாகவே இவ்வளவு நீர் தேங்கி நிற்பது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் தானே பகுதியில் உள்ள சுரங்கப் பாதை ஒன்றில் மழைநீரில் கார் சிக்கியது. இதனால் காரில் இருந்தவர்கள் உதவிக்கு குரல் கொடுத்த போது, அங்கிருந்த 2 பேர் உடனடியாக மழைநீரில் நீச்சல் அடித்து உதவி செய்தனர். இந்த காட்சி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
This is the scene in front of Goregaon Oberoi Mall, which is supposed to be the most posh area.
— Thandaitweets (@mohit_blogg) August 19, 2025
God bless this country and its corruption 😭🇮🇳#MumbaiRains pic.twitter.com/m1YnnmPjA1
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications