சத்தமே இல்லாமல் ரூ.35 கோடி அபேஸ்.. கதறி துடிக்கும் 72 வயது முதியவர்.. மொத்த சொத்தும் போச்சு
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் 72 வயதான முதியவர் ஒருவரிடம் டிரேடிங் எனச் சொல்லி பங்குச்சந்தை மோசடி நடந்துள்ளது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் இவரிடம் மோசடி செய்துள்ளனர். அதில் அந்த முதியவர் ரூ.35 கோடி இழந்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
பொதுவாகவே வயதாகும்போது நம்மால் எல்லா விஷயங்களையும் சரியாக டிராக் செய்ய முடியாது. அந்த காலகட்டத்தில் தான் இளைஞர்களின் உதவி நமக்கு தேவைப்படும். நமது நாட்டில் பெரும்பாலும் வயதானவர்களுக்கு இளைஞர்கள் உதவவே செய்வார்கள். ஆனால், சில நேரங்களில் முதியவர்களைக் குறிவைத்து ஏமாற்றம் சம்பவங்களும் நடக்கவே செய்கிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

முதியவர்
மும்பையைச் சேர்ந்த 72 வயதான பாரத் ஹரக் சந்த் ஷா என்பவர் பங்குச் சந்தை மோசடியில் ₹35 கோடி இழந்துள்ளார். மடுங்கா மேற்கு பகுதியைச் சேர்ந்த இவர், ஷேர் மார்கெட் நிறுவனத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக டிரேட் செய்துள்ளார். ஆனால், விஷயம் என்னவென்றால் இவரது கணக்கை வைத்து அந்த நிறுவன ஊழியர்களே டிரேட் செய்துள்ளனர். இந்த மோசடியில் தான் ஷா ₹35 கோடி இழந்துள்ளார்.
பரெல் என்ற பருதியில் கேன்சர் நோயாளிகள் தங்கும் ஹாஸ்டலை நடத்தி வருபவர் தான் இந்த ஹரத் சந்த் ஷா.. இவரது தந்தை சில பங்குகளில் முதலீடு செய்திருந்த நிலையில், தந்தை மறைவுக்குப் பிறகு 1984ல் அந்த பங்குகள் இவருக்கு கிடைத்தது. இருப்பினும், பங்குகளைப் பற்றி பெரிதாகத் தெரியாததால் இந்த தம்பதி அதைக் கண்டுகொள்ளவில்லை.
டிரேடிங் நிறுவனம்
இந்தச் சூழலில் தான் கடந்த 2020ல் பங்குகள் அனைத்தும் உச்சத்தில் இருப்பதால் தந்தையின் பங்குகளை செக் செய்யுமாறு நண்பர் ஒருவர் சொல்லி இருக்கிறார். அதைக் கேட்டு இவரும் கடந்த 2020ல் தனக்கும் தனது மனைவிக்கும் குளோப் கேபிடல் மார்க்கெட்ஸ் என்ற நிறுவனத்தில் டிமாட் கணக்கைத் தொடங்கியுள்ளார். தந்தையிடம் இருந்து கிடைத்த பங்குகளை இந்த கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
தொடக்கத்தில் எல்லாம் சரியாகவே இருந்துள்ளது. கம்பெனியில் இருந்து சிலர் சந்த் ஷாவை தொடர்பு கொண்டனர். கூடுதல் முதலீடு தேவையில்லை என்றும், இந்த பங்குகளைப் பிணையமாக (collateral) வைத்து வர்த்தகம் செய்யலாம் என்று சொல்லியுள்ளனர். மேலும், ஷாவுக்கு உதவத் தனியாக அக்ஷய் பரியா மற்றும் கரண் என இருவரை நியமித்துள்ளனர். அதன் பிறகே எல்லாம் மாறியுள்ளது.
என்ன நடந்தது?
முதலில் அவர்கள் தினசரி கால் செய்து, எந்த பங்குகளை வாங்கலாம் ன்பை ஷாவுக்கு அறிவுறுத்தினர். இருப்பினும், சில வாரங்களிலேயே நேரடியாக வீட்டிற்கு வருவது.. அவரது லேப்டாப்பில் இருந்தே மெயில் அனுப்புவது உள்ளிட்ட வேலைகளையும் செய்துள்ளனர். ஷா அவர்களை முழுமையாக நம்பி இருக்கிறார். அவர்கள் கேட்கும்போதெல்லாம் ஓடிபிக்களை சொல்லி இருக்கிறார். எப்போது கேட்டாலும் அவ்வளவு லாபம், இவ்வளவு லாபம் என்றே சொல்லி இருக்கிறார்கள். கடந்த 2020 முதல் 2024 வரை அவருக்கு அளிக்கப்படும் ஆண்டு அறிக்கையிலும் லாபம் என்றே இருந்துள்ளது. இதனால் ஷா பெரிதாக எதையும் யோசிக்கவில்லை.
இந்தச் சூழலில் தான் கடந்த 2024ல் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குளோப் கேபிடல் நிறுவனத்தில் இருந்து ஒருவர் ஷாவுக்கு கால் செய்துள்ளார். உங்கள் டிரேடிங்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ₹35 கோடி கட்டுங்கள். இல்லை என்றால் பங்குகள் அனைத்தையும் விற்றுவிடுவோம் என சொல்லியுள்ளனர். அப்போது தான் ஷாவுக்கு தன்னை சுற்றி மோசடி நடந்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளார். அதாவது ஷாவுக்கு தெரியாமலேயே அந்த இரு ஊழியர்களும் பல டிரேட்களை செய்துள்ளார். அதில் தான் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எஞ்சிய சொத்துகளும் போய்விடுமோ என பயந்த ஷா, தனது சொத்துகளை விற்று ₹35 கோடி கடனையும் செலுத்தினார்.
போலீசில் புகார்
குளோப் நிறுவனத்திற்கு சென்று ஒர்ஜினல் அறிக்கையை டவுன்லோடு செய்து பார்த்துள்ளார். அப்போது தான் அதற்கும் தனக்கு அனுப்பப்பட்ட லாப அறிக்கைக்கும் எந்தளவுக்கு வித்தியாசம் இருக்கிறது என்பதை அவர் பார்த்துள்ளார். அப்போது தான் அவர் அதிர்ந்து போய்விட்டார். தனக்கே தெரியாமல் தனது கணக்கை வைத்து இவ்வளவு பெரிய மோசடி நடந்திருப்பதால் அதிர்ந்தார். இது தொடர்பாக ஷா அளித்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications