சிவசேனா சஞ்சய் ராவத் ஜாமீனில் விடுதலை!அமலாக்கத்துறை ஆட்டத்துக்கு மும்பை ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி டோஸ்!
மும்பை: சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய் ராவத் எம்.பி.யை முகாந்திரமே இல்லாமல் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்ததற்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் சஞ்சய் ராவத்தை பிணையில் விடுதலை செய்யவும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேஷ்பாண்டே உத்தரவிட்டார்.
சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ராஜ்யசபா எம்.பி.யான சஞ்சய் ராவத். பாஜகவை மிக கடுமையாக விமர்சித்து வந்தவ சஞ்சய் ராவத்.

சிறையில் அடைப்பு
மும்பை கோரேகாவ் பத்ரா சால் குடியிருப்பு சீரமைப்பில் மோசடி நடந்தது என்பது சஞ்சய் ராவத் உதவியாளர் மீதான வழக்கு. இந்த மோசடியில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது என்பது அமலாக்கத்துறை வழக்கு. இவ்வழக்கில் கடந்த ஜூலை மாதம் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டார். பின்னர் மும்பை ஆர்தர் சாலை சிறையில் சஞ்சய் ராவத் அடைக்கப்பட்டார். கடந்த 100 நாட்களாக சிறைவாசம் அனுபவித்த சஞ்சய் ராவத், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுக்கள் மீதான வாதங்கள் கடந்த நவம்பர் 2-ந் தேதியுடன் நிறைவடைந்தது.

ஜாமீனில் விடுதலை- அமலாக்கத்துறைக்கு கண்டனம்
இதனைத் தொடர்ந்து இன்று மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேஷ்பாண்டே, சஞ்சய் ராவத்தை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அத்துடன் அமலாக்கத்துறைக்கு கடும் கண்டனமும் தெரிவித்தார் நீதிபதி. சஞ்சய் ராவத் உதவியாளர் மீது தொடரப்பட்டிருப்பது சிவில் வழக்கு; இதில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் என்பதற்கு முகாந்திரமே இல்லை. ஆனாலும் சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது என கண்டனம் தெரிவித்தார் நீதிபதி தேஷ்பாண்டே.

ஹைகோர்ட்டில் அப்பீல்
ஆனாலும் அமலாக்கத்துறை சஞ்சய் ராவத் விடுதலையை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவுக்கு தடை கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

மருத்துவமனை செல்கிறார் ராவத்
சஞ்சய் ராவத்தின் விடுதலை தொடர்பாக அவரது சகோதரர் சுனில் ராவத் கூறுகையில், ஜாமீனில் சிறையில் இருந்து சஞ்சய் ராவத் விடுதலை செய்யப்பட்டாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். அவரது உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை முன்னதாக சஞ்சய் ராவத் சந்தித்தார். அதன்பின்னர் சில இடங்களுக்கு சென்றுவிட்டு மருத்துவமனை செல்ல திட்டமிட்டுள்ளார் சஞ்சய் ராவத் என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications