Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறைக்குள் நாக்குக்கு வக்கணையாக நான்-வெஜ் சாப்பாடு கேட்கும் மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாதி ராணா

Subscribe to Oneindia Tamil

மும்பை: 2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் தஹவூர் ராணா, தற்போது விசாரணைக் காவலில் இருக்கும் நிலையில், தனது வீட்டை நினைத்து ஏக்கமடைந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னைக் கைது செய்யும்போது சுமத்தப்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் தனக்கு எவ்வளவு காலம் தண்டனை கிடைக்கும் என்பதை அவர் தொடர்ந்து விசாரணை அதிகாரிகளிடம் கேட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, ஒரு தகவல் கசிந்துள்ளது. அதன்படி, தஹவூர் ராணா தனது குடும்ப உறுப்பினர்களிடம் பேச விருப்பம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தனது சகோதரருடன் பேசுவதற்கான வழிமுறைகள் குறித்து அவர் என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

terrorist Mumbai

சமீபத்தில், ராணா பேனா, காகிதம் மற்றும் குர்ஆன் கேட்டதாகவும், அவரது இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது. தற்போது, அவர் அசைவ உணவு கோரியுள்ளதாகவும், ஆனால் நிர்ணயிக்கப்பட்ட விதிகளின்படி மட்டுமே உணவு வழங்கப்படுவதாகவும் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.

மேலும், விசாரணைக் காவலில் வைத்து விசாரிக்கும் போது தஹவூர் ராணா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மட்டுமல்லாமல், 26/11 பயங்கரவாத தாக்குதலில் தனக்குப் பங்கு இருந்ததை அவர் மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

விசாரணையின் போது, மும்பை தாக்குதலின் முக்கிய மூளையாகச் செயல்பட்டவர் டேவிட் கோல்மேன் ஹெட்லி என தஹவூர் ராணா கூறியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை எனவும் அவர் திட்டவட்டமாக மறுத்து வருகிறார். என்.ஐ.ஏ தரப்பில் தஹவூர் ராணாவுக்குத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்றும், அவரது உடல்நலம் சீராக உள்ளதென்றும் கூறப்படுகிறது. 26/11 தாக்குதல் தொடர்பான ஆதாரங்களைக் காண்பித்து விசாரணை நடைபெற்ற போதிலும், அவர் விசாரணை அமைப்புக்கு ஒத்துழைக்க மறுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2008 நவம்பர் 26 அன்று, மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல், ஓபராய் டிரிடென்ட், சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மற்றும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையம், நரிமன் ஹவுஸ் உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் 10 பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இந்தத் தாக்குதலை லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புடன் இணைந்து தஹவூர் ராணா திட்டமிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+