நீங்க சிவசேனா கூட கூட்டணி வைக்கலாம்.. நாங்க பாஜக ஆட்சியில் இணையக் கூடாதா? சரத்பவாருக்கு நறுக் கேள்வி
மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இந்துத்துவா கொள்கையை பேசும் சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்; சிவசேனாவை போல செயல்படும் பாஜக ஆட்சிக்கு நாங்கள் ஆதரவு தருவது மட்டும் எப்படி தவறானதாக இருக்க முடியும்? என அஜித்பவார் அணியின் பிரபுல் பட்டேல் கேள்வி எழுப்பி உள்ளார்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்துள்ளது. அஜித் பவார் தலைமையில் பிரபுல் பட்டேல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஆளும் பாஜக அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர். அஜித் பவார், பாஜக அரசில் துணை முதல்வராகி இருக்கிறார். மேலும் 8 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அஜித் பவார் தலைமையிலான அதிருப்தியாளர்களை அடுத்தடுத்து சரத்பவார் தரப்பு நீக்கி வருகிறது. மேலும் அஜித் பவார் உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளையும் சரத்பவார் தரப்பு மேற்கொண்டு வருகிறது.
ஆனால் அஜித் பவார் தரப்பு , பாஜக அரசில் இணைந்ததை நியாயப்படுத்தி வருகிறது. அதாவது நாகாலாந்து மாநிலத்தில் பாஜக பங்கேற்றிருக்கும் கூட்டணி அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என சரத்பவார் அறிவித்தார். அதாவது பாஜக ஆட்சிக்கு நாகாலாந்தில் ஆதரவு தந்தவர் சரத்பவார்; மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சிக்கு நாங்கள் ஆதரவு தருவது மட்டும் எப்படி தவறாக இருக்கும்? என்கிறது அஜித் பவார் தரப்பு.
தற்போது அஜித்பவார் அணியின் பிரபுல் பட்டேல் மற்றொரு கேள்வியை முன்வைத்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜகவின் கூட்டணி கட்சியாக இருந்தது இந்துத்துவா கொள்கையை அடிப்படையாக கொண்ட சிவசேனா. அந்த சிவசேனாவுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்திருக்கிறது. அந்த சிவசேனா போலவே செயல்படக் கூடிய பாஜக அரசுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம். இது எப்படி தவறாகும்? என்கிறார் பிரபுல் பட்டேல்.
மேலும் மக்களின் நலன் கருதி பல்வேறு கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோலதான் நாங்கள் பாஜக அரசாங்கத்தை ஆதரிப்பதையும் மக்கள் நலன் கருதியே பார்க்க வேண்டும் என்றார் பிரபுல் பட்டேல்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications