மகாராஷ்டிராவில் நாளைக்குள் புதிய முதல்வர் பதவியேற்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சியா? என்ன நடக்கும்?
மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நாளையுடன் (நவம்பர் 26) முடிவடைவதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. சட்டசபையின் பதவிகாலம் நாளையுடன் முடிவதால், நாளைக்குள் புதிய முதலமைச்சர் பதவியேற்க வேண்டும், இல்லையென்றால் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வரும் என தகவல்கள் பரவி வந்தன. ஆனால், மகாயுதி கூட்டணி வட்டாரங்கள் வேறு கணக்கைச் சொல்கின்றன.
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில், ஆளும் கட்சி கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாஜக தனிப்பெரும் கட்சியாக 132 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. கூட்டணி கட்சிகளான சிவசேனாவின் ஷிண்டே அணி 57 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

பாஜக கூட்டணி அமோக வெற்றி: ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் 16 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா 20 இடங்களிலும், சரத் பவாரின் சரத்சந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றன.
தற்போது பாஜக கூட்டணியில் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாகவும் உள்ளனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், குறிப்பாக பாஜக 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த முதல்வர் யார்?: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக தனிப்பெரும் கட்சியாக 132 இடங்களை கைப்பற்றி உள்ளதால், அக்கட்சியின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்பார் என பாஜகவினர் கூறி வருகின்றனர். ஆனால், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தனது முதல்வர் நாற்காலியை விட்டுத்தரத் தயாராக இல்லை. எனவே மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பதில் இன்னும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
நவம்பர் 26 கடைசி நாள்?: இந்தச் சூழலில் தான் நவம்பர் 26 ஆம் தேதியுடன் மகாராஷ்டிர சட்டப்பேரவையின் பதவிகாலம் முடிவடைவதால் அதற்குள் புதிய முதலமைச்சர் பதவியேற்க வேண்டும் என்றும், நவம்பர் 26 ஆம் தேதி நள்ளிரவுக்குள் பதவியேற்கவில்லை என்றால், அதன் பிறகு மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரும் என்றும் கருத்துகள் எழுந்து சலசலப்பு எழுந்துள்ளது.
ஆனால், இதனை மகாயுதி கூட்டணி கட்சியினர் மறுத்துள்ளனர். சட்டப்பேரவையின் பதவிகாலம் 26 ஆம் தேதியுடன் முடிவடைந்தாலும், புதிய முதல்வர் பதவியேற்கும் வரை முதல்வர் ஷிண்டேவே காபந்து முதல்வராக தொடர்வார், குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படாது, கடந்த காலங்களிலும், இதுபோல தாமதமாகவே முதல்வர் பதவ்யேற்பு நடந்துள்ளது எனத் தெரிவிக்கின்றனர்.
கடந்த கால வரலாறு: கடந்த காலங்களில் சட்டப்பேரவையின் பதவிகாலம் முடிவடைந்த சில நாட்கள் கழித்துத்தான் புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழா நடத்தப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 10வது சட்டப்பேரவையின் பதவிகாலம் 2004 அக்டோபர் 19 ஆம் தேதி நிறைவடைந்தது. ஆனால், புதிய முதலமைச்சர் நவம்பர் 1 2004 அன்றுதான் பதவி ஏற்றார்.
அதேபோல, 11வது சட்டமன்றத்தின் பதவிகாலம் 2009 நவம்பர் 3 ஆம் தேதி அன்று முடிவடைந்தது. ஆனால், புதிய முதலமைச்சர் 2009 நவம்பர் 7 ஆம் தேதிதான் பதவியேற்றார். மேலும், 12 வது சட்டமன்றத்தின் பதவிகாலம் 2014 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழா அக்டோபர் 31 ஆம் தேதி நடைபெற்றது.
தாமதமாகவே பதவியேற்பு: 13வது சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2019 நவம்பர் 9 ஆம் தேதி முடிவடைந்தது, ஆனால், 14வது சட்டமன்றத்தின் புதிய முதலமைச்சருக்கான பதவியேற்பு விழா 2014 நவம்பர் 28 ஆம் தேதியன்றுதான் நடந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பொதுவாகவே ஆட்சி அமைக்க கால அவகாசம் எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே தற்போதைய மகாராஷ்டிராவின் சட்டமன்ற பதவிக்காலம் நவம்பர் 26 ஆம் தேதியுடன் (நாளை) முடிவடைகிறது, ஆனால் அரசாங்கம் அமைப்பதற்கு கடுமையான காலக்கெடு எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. தேர்தலை நடத்த வேண்டிய காலக்கெடு, தேர்தல் கமிஷனுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்க போதிய அவகாசம் உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆளுநர் ஆலோசனை: அரசு அமைப்பதற்கான காலக்கெடு குறித்து அட்வகேட் ஜெனரல் மற்றும் பல சட்ட நிபுணர்களின் கருத்தை மகாராஷ்டிரா ஆளுநர் கேட்டுள்ளார். அதில், நவம்பர் 26 ஆம் தேதிக்கு முன்னர் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. முந்தைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைந்து 11 நாட்கள் வரை புதிய அரசாங்கம் அமைவதாக மகாராஷ்டிரா அரசியல் வரலாற்று முன்னுதாரணங்கள் தெரிவிக்கின்றன.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications