காமம் இல்லை, காதல் தான்.. சிறுமி பாலியல் வழக்கில் இளைஞருக்கு ஜாமீன் கொடுத்த நீதிபதி கருத்து
மும்பை: 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி இளைஞருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இருவருக்கும் இடையே இருந்த பாலியல் உறவு காதலால் ஏற்பட்டுள்ளது.. காமத்தால் இல்லை.. எனவும் நீதிபதி கூறினார்.
மகராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு 13 வயது சிறுமி திடீரென மாயமாகிவிட்டதாக போலீசாருக்கு புகார் வந்தது. சிறுமியின் தந்தை இந்த புகாரை அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடி கண்டுபிடித்தனர். பின்னர் சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகர தகவல் தெரியவந்தது. அதாவது, தான் தனக்கு தெரிந்த இளைஞர் நிதின் தபேரோவுடன் விருப்பப்பட்டுத்தான் சென்றதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக அவர் உறுதியளித்து இருக்கிறார்.

எனவே, நானாக விருப்பப்பட்டு அவருடன் சென்றேன். வீட்டில் இருந்து செல்லும் போது நகை மற்றும் பணம் ஆகியவற்றையும் எடுத்து சென்று அவருடன் தங்கியிருந்ததாகவும் சிறுமி கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமி மைனர் என்பதால் அவரை கடத்தி சென்ற இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி இளைஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இளைஞர் தாக்கல் செய்த மனு மீதான் விசாரணை மும்பை ஹைகோர்ட் நாக்பூர் கிளையில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி உர்மிளா ஜோஷி பல்கே, இளைஞருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இளைஞருக்கு ஜாமீன் அளிப்பதற்காக நீதிபதி அளித்த தீர்ப்பில் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
இருவருக்கும் இடையே இருந்த பாலியல் உறவு காதலால் ஏற்பட்டுள்ளது. காமத்தால் இல்லை. தானாக விருப்பப்பட்டே குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞர் நிதின் தபேரோவுடன் சென்றுள்ளார். குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் மனுதாரரும் 26 வயதே ஆன இளம் வயது நபராக உள்ளார். இதனால், காதலால் இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.
-
மனமகிழ் மன்றங்களில் மது விற்பனை.. கண்டு கொள்ளாத காவல்துறை! அதிரடியாக உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்.! -
பூவை ஜெகன்மூர்த்தி மீதான கடத்தல் வழக்கு தள்ளுபடி! கடுமையாக வாதம் வைத்த போலீஸ்.. மனுதாரர் ட்விஸ்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications