மஞ்சள் + ஆரஞ்சு அலர்ட்.. மழை நீரில் மிதக்கும் மும்பை.. பொதுமக்கள் அவதி.. இதுவரை 3,500 பேர் மீட்பு
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் மும்பையில் விடப்பட்டுள்ள நிலையில் மழை நீடித்து வருகிறது
மும்பை: மும்பையில் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. தானே பகுதியில் திடீர் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.. இதனால், மின்சார ரயில்கள், பேருந்துகள், டாக்சிகளுக்காக மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.. 3,500 பேர் தற்போது பாதுகாப்பான இடத்திற்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளனர்.
மும்பையில் நேற்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதாவது, வரும் வெள்ளிக்கிழமை வரை கனமழை பெய்யும் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்பு படையினரும் களமிறங்கினார்கள்..

மஞ்சள் அலர்ட்
பிறகு, மும்பை மற்றும் தானே மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்தது. இந்நிலையில், நேற்று காலை முதல் மழை கொட்ட தொடங்கிவிட்டது.. மும்பை பகுதியில் கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில்வே தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.. அதனால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது... பல இடங்களில் ரயில்கள் வர காலதாமதம் ஏற்பட்டது.

வெள்ளப்பெருக்கு
மும்பையில் சயான், பாந்த்ரா, கிங்சர்க்கிள், மாட்டுங்கா, குர்லா போன்ற பகுதியில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது... இதனால் பல வழித்தடங்களில் பஸ்கள் வேறு ரூட்டில் திருப்பி விடப்பட்டது. மழை நீர் முழங்கால் அளவு தேங்கி நிற்கிறது.. பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, சாலையோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. மும்பை கல்பாதேவி மற்றும் கயாவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன...

ராய்காட்
சயான், அந்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் காணப்படுகிறது. தானே, நவி மும்பை பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு அதிகமாக இருந்தது. மும்பையில் இடைவிடாது பெய்து வரும் மழை மற்றும் அதன் காரணமாக நீர் தேங்குவதால், ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் ஜூன் 8 வரை பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆரஞ்சு அலர்ட்
இந்த பகுதிகளில்தான் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது... இப்போதைக்கு மகாராஷ்டிராவில் தேசிய பேரிடர் மீட்பு படையின் எட்டு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே, கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ராய்காட் மற்றும் ரத்னகிரி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்..
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications