இதுதான் இந்தியா வீசிய குண்டு.. கர்தார்பூர் குருத்வாராவில் காட்சிக்கு வைத்து பாக். விஷமம்!
மும்பை: இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் விருப்பத்திற்குரிய வழிபாட்டு தலமான கர்தார்பூர் குருத்வாராவில், கடந்த 1971 போரின்போது பாகிஸ்தான் மீது இந்தியா வீசியதாக சிறிய ரக குண்டு ஒன்றை பாகிஸ்தான் காட்சிப்படுத்தி தனது சின்னப் புத்தியைக் காட்டியுள்ளது.
இதன்மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தானியர்கள் இடையே பகைமை உணர்வை மேலும் தூண்டும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.
குருத்வாராவின் வெளியில் கண்ணாடி பெட்டியின் உள்ளே வைக்கப்பட்டுள்ள இந்த சிறிய ரக குண்டின் மீது கண்டா என்ற வழிபாட்டு சின்னத்தையும் வைத்துள்ள பாகிஸ்தான், இதன் அருகில் இதுகுறித்து ஒரு விளக்க போர்டையும் வைத்துள்ளது.

கண்ணாடி பேழையில் குண்டு
இந்தியா மற்றும் பாகிஸ்தானியர்கள் தொடர்ந்து பகைமை உணர்வுடன் இருப்பதை உறுதி செய்துவரும் பாகிஸ்தான் அரசு, இந்த முறை தன்கையில் மத உணர்வையும் எடுத்துக் கொண்டுள்ளது. புகழ்பெற்ற கர்தார்பூர் குருத்வாரா வளாகத்தில் இந்தியா கடந்த 1971ம் ஆண்டு நடத்திய போரின்போது வீசிய சிறியரக குண்டை அங்கு பாகிஸ்தான் காட்சிப்படுத்தியுள்ளது.

இறைவனின் கருணையால் தப்பித்தது
கடந்த 1971ம் ஆண்டில் நடந்த போரின்போது இந்திய விமானப்படை குருத்வாராவை அழிக்கும் முயற்சியில் குண்டு வீசியதாகவும், ஆனால் இறைவனின் கருணையால், அது அழியாமல் பாதுகாக்கப்பட்டதாகவும் ஒரு விளக்க போர்டையும் பாகிஸ்தான் அரசு வைத்துள்ளது.

எந்தவித சேதமும் இல்லை
குருத்வாராவில் உள்ள ஒரு கிணற்றில் இந்த குண்டு கண்டெடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசு அந்த போர்டில் தெரிவித்துள்ளது. இந்த கிணற்றில் இருந்த தண்ணீரை கொண்டு, குருநானக் தன்னுடைய வயல்களுக்கு நீர்பாய்ச்சியதாக கூறப்படுகிறது.

இந்தியா பதிலளிக்கவில்லை
1971ம் ஆண்டில் நடைபெற்ற போரில் இருதரப்பிலும் குண்டுகள் வீசப்பட்ட நிலையில், தற்போது இந்த பிரச்சினையை கையில் எடுத்து பிரிவினையை தூண்டும் பாகிஸ்தானின் இந்த செயல்பாட்டிற்கு இந்தியா உடனடியாக எந்தவித பதிலையும் அளிக்கவில்லை. ஆனால் இது வேண்டும் என்றே பாகிஸ்தான் செய்யும் விஷம வேலை என்று எதிர்ப்பு கிளம்பி விட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications