அவுரங்கசிப் பேனர்களுடன் நடனம்.. களத்தில் குதித்த இந்து அமைப்பினர்.. பதற்றத்தில் மகாராஷ்டிரா!
மும்பை: மகாராஷ்ட்ராவில் முகலாய மன்னன் அவுரங்கசிப் பேனர்களுடன் சில இளைஞர்கள் நடனமாடிய சம்பவம் அங்கு பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட மதத்தினரின் பேரணியின் போது இந்த சம்பவம் நடைபெற்றதை கண்டிக்கும் வகையில், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக, அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிவாஜி vs அவுரங்கசீப்
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதலாக, சில குறிப்பிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களையும், மன்னர்களையும் தங்களின் அடையாளமாக அக்கட்சியினர் காண்பித்து வருகின்றனர். உதாரணமாக, சுதந்திரப் போராட்டம் என எடுத்துக்கொண்டால் சாவர்க்கரையும், சந்திரசேகர ஆசாத்தையும் பாஜக கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அதேபோல, மன்னர்களில் சத்ரபதி சிவாஜியை ஆதர்சன நாயகனாக பாஜக போற்றி வருகிறது. அதே சமயத்தில், முகலாய மன்னர் அவுரங்கசிப், திப்பு சுல்தான் ஆகியோருக்கு எதிராகவும் பாஜக பேசி வருகிறது. இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திப்பு சுல்தானை தங்கள் அடையாளமாக காட்ட முற்படுகின்றன. இது, சில சமயங்களில் மதரீதியான மோதலுக்கும் வழிவகுத்து விடுகிறது என்பதையும் மறுக்க முடியாது.

மத ஊர்வலம்
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள மங்ரூல்பீர் பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கடந்த 14-ம் தேதி இரவு ஊர்வலம் நடத்தினர். அப்போது, ஊர்வலத்தில் கலந்துகொண்ட சில இளைஞர்கள் முகலாய மன்னர் அவுரங்கசீப், திப்பு சுல்தான் ஆகியோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட பேனர்களை ஏந்திக்கொண்டு நடனமாடியபடி சென்றனர். மேலும், அந்த மன்னர்களை புகழும்படியான பாடல்களும் இசைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கொதித்தெழுந்த இந்து அமைப்பினர்
இதனிடையே, அவுரங்கசீப் பேனர்களுடன் இளைஞர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாஷிம் மாவட்டம் உள்ளிட்ட பல இடங்களில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவுரங்கசீப், திப்பு சுல்தான் புகைப்படங்களுடன் நடனமாடியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதனால் மகாராஷ்ட்ராவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இரு தரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழல் எழுந்துள்ளது.

8 பேர் மீது வழக்கு பதிவு
இதன் தொடர்ச்சியாக, அவுரங்கசீப் பேனர்களை ஏந்தி வந்த 8 பேர் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் தலைமறைவாகியுள்ளதால் போலீஸார் அவர்களை தேடி வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவத்தை முன்வைத்து பல இடங்களில் இரு மதங்களைச் சேர்ந்தவர்கள் இடையே மோதல் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதங்களைத தடுக்க ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications