மும்பையில் வெளிநாட்டு பெண்ணின் பின்னாடியே போன 2 பேர்! 15 நிமிடங்கள் நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ!
மும்பை: மும்பையில், போர்ச்சுகலைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டுப் பெண்ணை இருவர் பின்தொடர்ந்து வந்து செல்ஃபி கேட்டு தொந்தரவு செய்த வீடியோ வைரலாகி வருகிறது. இனெஸ் ஃபரியா என்ற அப்பெண், தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இனெஸ் பாரியா (Ines Faria) என்ற பயண வலைப்பதிவாளர் (travel vlogger) இந்தியாவில் 2 மாதங்களாக இருந்து வருகிறார்.

அவரது பயண அனுபவங்கள் பெரும்பாலும் அழகானவை, அன்பானவை, வரவேற்கும் தன்மை கொண்டவை என்று கூறியுள்ளார். ஆனால், மும்பையில் நடந்த ஒரு சம்பவம் அவரை மிகவும் பாதித்துள்ளது.
இனெஸ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோவில், தென் மும்பையில் (தோபி காட் - Dhobi Ghat பகுதியில்) இரண்டு இளைஞர்கள் தன்னைத் தொடர்ந்து வந்ததாகக் கூறியுள்ளார்.
அவர்கள் திரும்பத் திரும்ப வந்து செல்ஃபி எடுத்துக் கொள்ளக் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு இனெஸ் நாகரீகமாக "இல்லை" என்று பலமுறை மறுத்தும் அவர்கள் விடாமல் பின்தொடர்ந்துள்ளனர். இது 15 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்ததால் மிகுந்த அசௌகரியமும் பயமும் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
வீடியோவில் இனெஸ் நடந்து செல்வது தெரிகிறது. இரண்டு ஆண்கள் அருகில் வந்து செல்ஃபி கேட்பது, அவர் அசௌகரியத்துடன் புன்னகைக்க முயல்வது, இறுதியில் அவர்களைத் தள்ளிவிடுவது போன்ற காட்சிகள் உள்ளன.
"நோ என்றால் அது முழு வாக்கியம். உங்கள் பாதுகாப்பும் வசதியும் முதலிடம் பெற வேண்டும்" என்று அவர் எழுதியுள்ளார். இந்த வீடியோ வைரலானதும் மும்பை போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
அக்ரிபாடா போலீஸ் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாயின்ட் கமிஷனர் ஆப் போலீஸ் (லா அண்ட் ஆர்டர்) சத்யநாராயண் சௌத்ரி "உள்ளூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். CCTV பதிவுகளை ஆய்வு செய்து, சந்தேக நபர்களைத் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு, சுற்றுலாப் பயணிகளுக்கு மரியாதை, செல்ஃபி ஆர்வத்தால் ஏற்படும் தொல்லை போன்றவை பேசப்படுகின்றன. இனெஸ் இதுவரை இந்தியாவில் நல்ல அனுபவமே பெற்றதாகக் கூறியுள்ளதால், இது தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்திய கலாச்சாரத்துக்கு ஏற்ப அனைவரும் மரியாதையுடன் நடக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மும்பை போலீஸ் விரைவில் குற்றவாளிகளைப் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications