ஒரு முறை மூக்குக்குள் குச்சியால குடையறதே பிடிக்கலையே.. 20 முறை கொரோனா டெஸ்ட் எடுத்த ப்ரீத்தி ஜிந்தா!

Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகையும் பஞ்சாப் ஐபிஎல் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தாவுக்கு 20ஆவது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

13ஆவது ஐபிஎல் போட்டிகள் அபுதாபியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் படுதோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி அண்மைகாலமாக சில வெற்றிகளையும் குவித்துள்ளது.

இதையடுத்து ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலில் 5ஆவது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது. இந்த அணியின் நிர்வாகியான ப்ரீத்தி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்கு வருகை தந்து, தங்கள் அணியினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

இந்த நிலையில் அவர் 20ஆவது முறையாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதனால் அவர் கொரோனா டெஸ்ட் குயின் என அழைக்கப்படுகிறார். மேலும் துபாயில் கொரோனா தனிமைப்படுத்தல் குறித்த அனுபவங்கலை நெட்டிசன்களுடன் பகிர்ந்து கொண்டார்.

6 நாட்கள்

6 நாட்கள்

அப்போது அவர் கூறுகையில் பலரும் என்னிடம் ஐபிஎல் அணிகளுக்கு எப்படி கொரோனா பாதுகாப்பு வழங்கப்படுகிறது என கேட்டிருந்தனர். அத்துடன் என்னுடைய அனுபவத்தையும் கேட்டிருந்தனர். நான் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டேன்.

உடற்பயிற்சிக் கூடம்

உடற்பயிற்சிக் கூடம்

ஒவ்வொரு 3 முதல் 4 நாட்களுக்கும் இங்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அறையில் இருந்து வெளியே செல்லக் கூடாது. எங்கள் அணிக்கு என கொடுக்கப்பட்டிருக்கும் உணவகம் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சுதந்திரப் பறவை

சுதந்திரப் பறவை

எந்த உணவும் வெளியிலிருந்து கொண்டு வரக்கூடாது. வெளியாட்கள் யாருசடனும் பழகக் கூடாது. என்னை போன்று சுதந்திரப் பறவையாக இருக்க விரும்புவோருக்கு இது கடினமானதாகும். இருந்தாலும் கொரோனாவிற்கு இடையிலும் ஐபிஎல் நடத்தப்படுகிறது என்பதற்காக பிசிசிஐ மற்றும் மருத்துவக் குழுவினருக்கு நன்றி என்றார் ப்ரீத்தி ஜிந்தா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+