குஜராத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாட அனுமதிப்பதா? பொங்குது மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா
மும்பை: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அனுமதிக்கப்பட்டுள்ளதற்கு ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி தொடங்குகிறது. ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நவம்பர் 19-ந் தேதி வரை நடைபெறும். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15-ந் தேதி நடைபெற இருக்கிறது. இப்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த போட்டிதான் பேசுபொருளாகி இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான குஜராத் கிரிக்கெட் போட்டி பெரும் எதிர்பார்ப்பையும் பல்வேறு அரசியல் விவாதங்களையும் கிளப்பிவிட்டுள்ளது.
இன்னொரு பக்கம் அகமதாபாத் வர்த்தகர்கள், இப்போதே கிரிக்கெட் போட்டியை முன்வைத்து பல்வேறு ஆஃஃபர்கல் உள்ளிடவைகளையும் அறிவித்து வருகின்றனர். இரு நாடுகளிடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாளுக்கான ஹோட்டல் முன்பதிவுகள், விறுவிறுவென நடைபெறுகிறது. இதனை பயன்படுத்து நாள் வாடகையை சர்வசாதாரணமாக ரூ10,000, ரூ15,000 என உயர்த்தியும் இருக்கின்றனர். இப்போதே நட்சத்திர ஹோட்டல்கள் பெரும்பாலும் புக் ஆகியும் விட்டனவாம்.
தற்போது இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடத்துவதற்கு எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது. மகாராஷ்டிராவின் ராஜ்தாக்கரே தலைமையிலான் நவநிர்மாண் சேனாவை சேர்ந்த சந்தீஷ் தேஷ்பாண்டே இது தொடர்பாக கூறியதாவது: நமது ராணுவ வீரர்களை படுகொலை செய்தவர்கள் பாகிஸ்தானியர்கள். பாகிஸ்தான் நாட்டுடன் நமது வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவதை எப்படி ஏற்க முடியும்? இந்தியாவில் நடத்தப்பட்ட அனைத்து பயங்கரவாத தாக்குதல்களுக்கும் பின்னணியில் இருப்பது பாகிஸ்தான். அந்த நாட்டுடன் சேர்ந்து நாம் விளையாடுவது எப்படி சரியாகும்?
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் விளையாடும் போது, பாகிஸ்தான் கொடியுடன் பாகிஸ்தானியர்களும் வருவார்கள். இதனை நாம் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? இருநாடுகளிடையே பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண வேண்டும். இவ்வாறு சந்தீஷ் தேஷ் பாண்டேகூறினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications