Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஜராத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாட அனுமதிப்பதா? பொங்குது மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா

Subscribe to Oneindia Tamil

மும்பை: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அனுமதிக்கப்பட்டுள்ளதற்கு ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி தொடங்குகிறது. ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நவம்பர் 19-ந் தேதி வரை நடைபெறும். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Raj Thackerays MNS Oppose to India-Pakistan match in Gujarat

இதில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15-ந் தேதி நடைபெற இருக்கிறது. இப்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த போட்டிதான் பேசுபொருளாகி இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான குஜராத் கிரிக்கெட் போட்டி பெரும் எதிர்பார்ப்பையும் பல்வேறு அரசியல் விவாதங்களையும் கிளப்பிவிட்டுள்ளது.

இன்னொரு பக்கம் அகமதாபாத் வர்த்தகர்கள், இப்போதே கிரிக்கெட் போட்டியை முன்வைத்து பல்வேறு ஆஃஃபர்கல் உள்ளிடவைகளையும் அறிவித்து வருகின்றனர். இரு நாடுகளிடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாளுக்கான ஹோட்டல் முன்பதிவுகள், விறுவிறுவென நடைபெறுகிறது. இதனை பயன்படுத்து நாள் வாடகையை சர்வசாதாரணமாக ரூ10,000, ரூ15,000 என உயர்த்தியும் இருக்கின்றனர். இப்போதே நட்சத்திர ஹோட்டல்கள் பெரும்பாலும் புக் ஆகியும் விட்டனவாம்.

தற்போது இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடத்துவதற்கு எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது. மகாராஷ்டிராவின் ராஜ்தாக்கரே தலைமையிலான் நவநிர்மாண் சேனாவை சேர்ந்த சந்தீஷ் தேஷ்பாண்டே இது தொடர்பாக கூறியதாவது: நமது ராணுவ வீரர்களை படுகொலை செய்தவர்கள் பாகிஸ்தானியர்கள். பாகிஸ்தான் நாட்டுடன் நமது வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவதை எப்படி ஏற்க முடியும்? இந்தியாவில் நடத்தப்பட்ட அனைத்து பயங்கரவாத தாக்குதல்களுக்கும் பின்னணியில் இருப்பது பாகிஸ்தான். அந்த நாட்டுடன் சேர்ந்து நாம் விளையாடுவது எப்படி சரியாகும்?

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் விளையாடும் போது, பாகிஸ்தான் கொடியுடன் பாகிஸ்தானியர்களும் வருவார்கள். இதனை நாம் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? இருநாடுகளிடையே பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண வேண்டும். இவ்வாறு சந்தீஷ் தேஷ் பாண்டேகூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+