மத்திய அரசின் அழுத்தங்களுக்கு பணிந்த ரிசர்வ் வங்கி.. உபரி நிதி விவகாரம் பற்றி ஆய்வு செய்ய குழு
Recommended Video

மும்பை: ரிசர்வ் வங்கி விவகாரத்தில், மத்திய அரசு தலையிடுவதாக விமர்சனம் எழுந்த நிலையில், நேற்று ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெற்றது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், தலைமையில், துணை ஆளுநர்கள், மத்திய அரசின் நியமன இயக்குநர்களான பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், நிதி சேவைகள் துறை செயலர் ராஜீவ் குமார், எஸ். குருமூர்த்தி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் காலை 10 மணி முதல் சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. வழக்கமான இயக்குநர்கள் கூட்டத்தைவிட இது, அதிகபட்ச நேரம் என்பதால், ஊடகங்கள் பரபரத்தன.
கூட்டத்திற்கு பிறகு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
- ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதி ரூ.9.69 லட்சம் கோடி தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்கலாம். கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் செயல்பாடு குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இணைந்து முடிவெடுக்கும்.
- சிறு மற்றும் குறுந்தொழில்முனைவோருக்கு 25 கோடி ரூபாய் வரை கடன் வழங்கலாம்
- ரூ.8000 கோடி வரையிலான கடன் பத்திரங்களை மத்திய அரசிடம் இருந்து வாங்குவது.
- ரிசர்வ் வங்கியின் முடிவுகள் அனைத்துமே மார்க்கெட்டில் நிதி புழக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளாகும்.
இதனிடையே, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறுகையில், மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் போக்கு நிலவவில்லை.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், மீடியாக்களும்தான், மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் நடுவே மோதல் நிலவுவதாக தெரிவித்து வருகிறார்கள். கடந்த காலங்களில் ரிசர்வ் வங்கி ஆளுநர்களாக இருந்தவர்களை, அப்போதைய காங்கிரஸ் அரசுகள் எவ்வாறு பணிநீக்கம் செய்தன என்பது குறித்து நாட்டு மக்கள் அறிவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியிலுள்ள உபரி நிதியை மத்திய அரசு கேட்டு வருவதாக வெளியான செய்திகளுக்கு நடுவே, அது தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்ய உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இதன் மூலம், மத்திய அரசின் நெருக்கடிக்கு ரிசர்வ் வங்கி பணிந்துள்ளதாகவே தெரிகிறது. அதேநேரம், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்யப்போவதாக வெளியான யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications