என்னுடன் பழகுவதற்கு முன்பே.. சுஷாந்த்சிங் கஞ்சாவுக்கு அடிமை.. ரியா சக்கரவர்த்தி பரபரப்பு வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: சுஷாந்த் சிங் கஞ்சாவுக்கு அடிமையானவர் என நடிகை ரியா சக்கரவர்த்தி போதை பொருள் தடுப்புப் பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவரது மரணம் குறித்து மர்மம் நீடித்து வருகிறது.

அமலாக்கத் துறை

அமலாக்கத் துறை

சுஷாந்த் சிங் மரணம் குறித்து சிபிஐ அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அப்போது சுஷாந்தின் காதலி நடிகை ரியா சக்கரவர்த்தியின் வாட்ஸ் ஆப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

போதை பழக்கம்

போதை பழக்கம்

இதுகுறித்து விசாரணை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடிகை ரியா சக்கரவர்த்தி உள்பட சிலரை கைது செய்தார்கள். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் நடிகர் சுஷாந்த் சிங்கின் மூத்த சகோதரி பிரியங்கா சிங், மைத்துனர் சித்தார்த் ஆகியோரும் சேர்ந்து கஞ்சாவை பயன்படுத்தினார்கள் என ரியா தெரிவித்தார்.

கஞ்சா

கஞ்சா

சுஷாந்த் கஞ்சாவை பயன்படுத்தியது அவரது குடும்பத்தினருக்கு தெரியும். நிறைய தடவை அவரது குடும்பத்தினரே கஞ்சா வாங்கி கொடுத்துள்ளனர். என்னுடன் பழகுவதற்கு முன்பே சுஷாந்த் சிங் கஞ்சாவுக்கு அடிமையானவர் என ரியா தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரங்கள்

ஆதாரங்கள்

இதுகுறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில் ஒருவரின் வாக்குமூலத்தை வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதற்கு வலுவான ஆதாரங்கள் வேண்டும். ரியாவின் வாக்குமூலம் குறித்து விசாரித்து வருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+