Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு கண்ணில் பார்வை போய்! ஒரு கை செயலிழந்து.. உயிர்பிழைத்த சல்மான் ருஷ்டி! முதல்முறையாக பொதுவெளியில்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரிட்டிஷ் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கத்திக்குத்துக்கு பிறகு ஒரு பார்வை பறிபோன நிலையில் முதல் முறையாக பொது வெளியில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 1988 ஆம் ஆண்டு தி சாத்தானிக் வெர்சஸ் (சாத்தானின் கவிதைகள்) என்ற புத்தகம் அவரது உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை தந்தது. இவர் ஏறக்குறைய பல ஆண்டுகளாக சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில் பல மிரட்டல்கள் இருந்து வந்தன.

இந்த புத்தகம் முஸ்லீம் மதத்திற்கு எதிராக இருப்பதாக கூறி பல நாடுகள் சல்மான் ருஷ்டியின் புத்தகத்திற்கு தடை விதித்தன. பல முஸ்லீம் நாடுகளில் உள்ள மக்களுக்கு இந்த புத்தகம் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

Salman Rushdie first appearance after knife attack

ஈரானைச் சேர்ந்த மதகுருவான ஆயத்துல்லா ருஹோலா என்பவர் சல்மான் ருஷ்டியை முஸ்லீம்கள் பார்த்த இடத்தில் கொன்று விடுங்கள் என வெளிப்படையாகவே அறிவித்தார். இதனால் சல்மான் ருஷ்டி அச்சத்துடனேயே வாழ்ந்து வரும் சூழல் இருந்தது. இந்த நிலையில் நியூயார்க்கில் உள்ள சாட்டகுவா நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கலந்து கொண்டார். அப்போது அவரை பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது சல்மான் ருஷ்டியை அடையாளம் தெரியாத நபர் மேடைக்கு சென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதை பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

உடனே மேடையில் இருந்தவர்கள் அந்த நபரை தடுத்தனர். சல்மான் ருஷ்டிக்கு கழுத்து, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தார். பின்னர் அந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளராக வந்தவர்களில் மருத்துவர் இருந்ததால் அவர் ருஷ்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக விமான ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவரது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு நீண்ட நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த நிலையில் சல்மான் ருஷ்டிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில் சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்பார்வை பறிபோவதற்கு வாய்ப்புகள் உள்ளன. கழுத்து, கை நரம்புகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவர் தொடர்ந்து வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார் என்றனர்.

அவருக்கு கல்லீரலிலும் கத்திக்குத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர். சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் ஹாதி மதார் என்றும் 24 வயதாகிறது என்றும்,அவர் நியூ ஜெர்சியை சேர்ந்த ஃபேர்வியூ பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. எங்கிருந்தோ மேடைக்கு வந்த மதார், ருஷ்டியை 10 முதல் 15 முறை கத்தியால் குத்தியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சல்மான் ருஷ்டிக்கு ஒரு பார்வை பறி போனது, ஒரு கை செயலிழந்தது. சுமார் 2 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் முதல்முறையாக ஒரு பொது நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி கலந்து கொண்டுள்ளார். வலது கண்ணில் காயம் ஏற்பட்டு பார்வை பறி போன நிலையில் ஒரு பக்கம் கருப்பு நிற கிளாஸும் மறு பக்கம் டிரான்ஸ்பாரண்ட் கிளாஸும் அணிந்துள்ளார்.

அவர் அமெரிக்காவில் நடந்த பென் விருது விழாவில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசுகையில் உங்களை எல்லாம் மீண்டும் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி, தாயம் இந்த வழியில் உருண்டதில் எனக்கு மகிழ்ச்சியே! பயங்கரவாதம் நம்மை அச்சுறுத்தக் கூடாது. தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. இந்த மக்கள் இல்லை என்றால் நான் இன்று இங்கு நின்று பேசி கொண்டிருக்க மாட்டேன்.

அன்றைய தினம் (கத்திக் குத்து நடந்த தினம்) நான்தான் அவர்களுடைய குறி. ஆனால் அங்கிருந்த மக்கள் எல்லாம் ஹீரோக்கள் போல் என் உயிரை காப்பாற்றினார்கள். அன்றைய தினம் அவர்கள் அனைவரும் தைரியமாக இருந்தார்கள். என்னுடைய வாழ்வை அவர்களிடம் ஒப்படைத்தேன் என உருக்கமாக தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+