ஒரு கண்ணில் பார்வை போய்! ஒரு கை செயலிழந்து.. உயிர்பிழைத்த சல்மான் ருஷ்டி! முதல்முறையாக பொதுவெளியில்!
மும்பை: பிரிட்டிஷ் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கத்திக்குத்துக்கு பிறகு ஒரு பார்வை பறிபோன நிலையில் முதல் முறையாக பொது வெளியில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 1988 ஆம் ஆண்டு தி சாத்தானிக் வெர்சஸ் (சாத்தானின் கவிதைகள்) என்ற புத்தகம் அவரது உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை தந்தது. இவர் ஏறக்குறைய பல ஆண்டுகளாக சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில் பல மிரட்டல்கள் இருந்து வந்தன.
இந்த புத்தகம் முஸ்லீம் மதத்திற்கு எதிராக இருப்பதாக கூறி பல நாடுகள் சல்மான் ருஷ்டியின் புத்தகத்திற்கு தடை விதித்தன. பல முஸ்லீம் நாடுகளில் உள்ள மக்களுக்கு இந்த புத்தகம் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

ஈரானைச் சேர்ந்த மதகுருவான ஆயத்துல்லா ருஹோலா என்பவர் சல்மான் ருஷ்டியை முஸ்லீம்கள் பார்த்த இடத்தில் கொன்று விடுங்கள் என வெளிப்படையாகவே அறிவித்தார். இதனால் சல்மான் ருஷ்டி அச்சத்துடனேயே வாழ்ந்து வரும் சூழல் இருந்தது. இந்த நிலையில் நியூயார்க்கில் உள்ள சாட்டகுவா நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கலந்து கொண்டார். அப்போது அவரை பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது சல்மான் ருஷ்டியை அடையாளம் தெரியாத நபர் மேடைக்கு சென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதை பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
உடனே மேடையில் இருந்தவர்கள் அந்த நபரை தடுத்தனர். சல்மான் ருஷ்டிக்கு கழுத்து, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தார். பின்னர் அந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளராக வந்தவர்களில் மருத்துவர் இருந்ததால் அவர் ருஷ்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக விமான ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு நீண்ட நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த நிலையில் சல்மான் ருஷ்டிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில் சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்பார்வை பறிபோவதற்கு வாய்ப்புகள் உள்ளன. கழுத்து, கை நரம்புகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவர் தொடர்ந்து வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார் என்றனர்.
அவருக்கு கல்லீரலிலும் கத்திக்குத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர். சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் ஹாதி மதார் என்றும் 24 வயதாகிறது என்றும்,அவர் நியூ ஜெர்சியை சேர்ந்த ஃபேர்வியூ பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. எங்கிருந்தோ மேடைக்கு வந்த மதார், ருஷ்டியை 10 முதல் 15 முறை கத்தியால் குத்தியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சல்மான் ருஷ்டிக்கு ஒரு பார்வை பறி போனது, ஒரு கை செயலிழந்தது. சுமார் 2 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் முதல்முறையாக ஒரு பொது நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி கலந்து கொண்டுள்ளார். வலது கண்ணில் காயம் ஏற்பட்டு பார்வை பறி போன நிலையில் ஒரு பக்கம் கருப்பு நிற கிளாஸும் மறு பக்கம் டிரான்ஸ்பாரண்ட் கிளாஸும் அணிந்துள்ளார்.
அவர் அமெரிக்காவில் நடந்த பென் விருது விழாவில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசுகையில் உங்களை எல்லாம் மீண்டும் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி, தாயம் இந்த வழியில் உருண்டதில் எனக்கு மகிழ்ச்சியே! பயங்கரவாதம் நம்மை அச்சுறுத்தக் கூடாது. தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. இந்த மக்கள் இல்லை என்றால் நான் இன்று இங்கு நின்று பேசி கொண்டிருக்க மாட்டேன்.
அன்றைய தினம் (கத்திக் குத்து நடந்த தினம்) நான்தான் அவர்களுடைய குறி. ஆனால் அங்கிருந்த மக்கள் எல்லாம் ஹீரோக்கள் போல் என் உயிரை காப்பாற்றினார்கள். அன்றைய தினம் அவர்கள் அனைவரும் தைரியமாக இருந்தார்கள். என்னுடைய வாழ்வை அவர்களிடம் ஒப்படைத்தேன் என உருக்கமாக தெரிவித்திருந்தார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications