முடிவெடுப்பதில் சஞ்சு சாம்சன் வல்லவர்.. ஆனால் கேப்டனாக பின்வாங்க தயங்க கூடாது.. ஸ்ரீசாந்த் அட்வைஸ்!
கேப்டனாக பின் வாங்குவதற்கு கூட சஞ்சு சாம்சன் தயங்க கூடாது என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
மும்பை: கேப்டனாக பல்வேறு முடிவுகளை எடுப்பதில் வல்லவராக இருக்கும் சஞ்சு சாம்சன், எந்த முடிவில் இருந்தும் பின் வாங்குவதில் தயக்கம் காட்டக் கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், சஞ்சு சாம்சனின் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. சென்னை, ராஜஸ்தான், கேரளா, பெங்களூரு ஏன் அயர்லாந்தில் கூட சஞ்சு சாம்சனை காண அதிகளவில் ரசிகர்கள் திரண்டனர்.
இதனை கணக்கில் கொண்டு சஞ்சு சாம்சனை கேப்டனாக்கியதன் மூலம் ராஜஸ்தான் அணி சிறப்பான முடிவை முன்னதாக எடுத்துள்ளது. அதேபோல் ஐபிஎல் தொடரில் நீண்ட அனுபவம் கொண்ட சஞ்சு சாம்சனின் கேப்டன்சி பலரையும் கடந்த முறை ஆச்சரியப்படுத்தியது.

கேப்டன் சஞ்சு சாம்சன்
அனுபவ வீரர் அஸ்வின் மற்றும் சஹாலை பயன்படுத்திய விதம், வீரர்களின் தேர்வு என்று கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் பலரின் பாராட்டையும் பெற்றார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் சஞ்சு சாம்சனுக்கு சில அறிவுரைகளை கூறியுள்ளார்.

ஸ்ரீசாந்த் அட்வைஸ்
அதில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் மிகவும் அட்டாக்கிங் கேப்டனாக வலம் வருகிறார். ஆனால் சில நேரங்களில் நாம் பின் வாங்குவதற்கும் தயக்கம் காட்டக் கூடாது. அதனை மட்டுமே சஞ்சு சாம்சனிடம் தொடர்ந்து கூறி வருகிறேன். ஏனென்றால் யாராக இருந்தாலும் அட்டாக் மற்றும் டிஃபெண்டிங்கில் கட்டுக்கோப்புடன் இயங்க வேண்டும். அந்த கட்டுப்பாட்டை சஞ்சு சாம்சன் அடைந்துவிட்டார்.

முடிவு எடுப்பதில் வல்லவர்
ஆனால் இன்னும் கேப்டன்சியில் கற்றுக் கொண்டே இருக்கிறார். அதேபோல் பலம் மற்றும் பலவீனத்தை கண்டறிந்து சிறந்த முடிவை எடுப்பதில் சஞ்சு சாம்சன் வல்லவராக இருக்கிறார் என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு முதல் முறையாக கேப்டனாக களமிறங்கிய சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணியை இரண்டாம் முறையாக இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார்.

பிரசித் கிருஷ்ணா காயம்
இதனால் நடப்பாண்டில் ராஜஸ்தான் அணி மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதேபோல் பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக யார் விளையாடப் போகிறார்கள், அவரது இடத்தை நிரப்பப் போகும் வீரரை சஞ்சு சாம்சன் எப்படி தேர்வு செய்கிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் அவரது பேட்டிங்கை பார்ப்பதற்காக ராஜஸ்தான் அணி ரசிகர்களும் ஆவலாக இருக்கின்றனர்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications