30 நிமிடம் போதும் எங்களுக்கு.. சஞ்சய் ராவத் அதிரடி
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 30 மணி நேரம் கால அவகாசத்தை சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது. ஆனால், நாங்கள் 30 நிமிடங்களில் பெரும்பான்மையயை நிரூபித்துவிடுவோம் என்று, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பட்னாவிஸ் தலைமையிலான அரசு நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. இதன்பிறகு நிருபர்களிடம் பேசினார் சஞ்சய் ராவத்.

சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணியை கட்டி எழுப்பி, ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் ஆரம்பம் முதலே மிகுந்த முனைப்பு காட்டுபவர் சஞ்சய் ராவத்தான். பாஜக தரப்புக்கு சிம்ம சொப்பனமாக மாறியுள்ள அவர் இந்த தீர்ப்பு பற்றி கூறியதை பாருங்கள்:
முதல்வராக அதிகாலையிலேயே, பட்னாவிஸ் பதவி பிரமாணம் செய்து, அரசியலமைப்பைக் கொலை செய்துள்ளனர். இது நமது தேசிய முழக்கமான சத்யமேவா ஜெயதே (உண்மை மட்டும் வெற்றி பெறுகிறது) என்பதற்கு எதிரான கொலை. அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள்? பதவியேற்ற பிறகு, பெரும்பான்மையை நிரூபிப்பதில் இருந்து அவர்கள் ஏன் ஓடுகிறார்கள்?
இன்று பாராளுமன்றத்தில், அரசியலமைப்பு குறித்து விவாதம் நடைபெறுகிறது. இந்த அரசியலமைப்பு அம்பேத்கர் உருவாக்கியதா? எங்களிடம் 162 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மூன்று முக்கிய அரசியல் கட்சிகளும் (என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சிவசேனா) நேற்று ஒன்றாக ஒரே இடத்தில் தங்கள் பலத்தை காட்டின. மகாராஷ்டிரா மக்கள், குடியரசு தலைவர் மாளிகை மற்றும் ஆளுநருக்கு எங்கள் வலிமையை காட்டத்தான் இவ்வாறு செய்தோம்.
உச்சநீதிமன்றம் பாஜக அரசுக்கு 30 மணி நேரம் காலக்கெடு வழங்கியுள்ளது. ஆனால் எங்கள் கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க வெறும் 30 நிமிடம் போதும். இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
-
தமிழ்நாடு 69% இட ஒதுக்கீடு.. உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை.. விஜய்க்கு பெரிய சவால் -
பாடம் கற்காத மத்திய அரசு.. நீட் லீக் விவகாரத்தில் வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்.. பின்னணி! -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
அதானியின் மெகா பிளான்: மாறும் தாராவி.. நவி மும்பையில் பாயும் பல்லாயிரம்கோடி முதலீடுகள் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications