மகாராஷ்டிராவில் சுயேட்சை வேட்பாளரிடம் படுதோல்வி அடைந்த பாஜக மூத்த தலைவரின் மகள்!
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக அரசில் அமைச்சராகவும், பாஜக மூத்த தலைவராகவும் உள்ளவர் ஏக்நாத் கட்சே. இவரது மகள் ரோகிணி கட்சே சுயேட்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார். முன்னதா பங்கஜ் முண்டே தோல்வி அடைந்தார். இவரும் மறைந்த பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டேவின் மகள் ஆவார்.
மகாராராஷ்டிராவில் சற்று முன் நிலவரப்படி மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன் 91 இடங்களில் முன்னிலை (மொத்தம் 101) வகிக்கிறது.

இதேபோல் சிவசேனா கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன் 51 இடங்களில் (மொத்தம் 59) முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன், 39 இடங்களில் ( மொத்தம் 43) இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன் 51 இடங்களில் (மொத்தம் 55) முன்னிலை வகிக்கிறது. சுயேட்சை ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளார. பிற கட்சிகளும் சில இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
இந்நிலையில்மகாராஷ்டிராவில் பாஜக அரசில் அமைச்சராகவும், பாஜக மூத்த தலைவராகவும் உள்ளவர் ஏக்நாத் கட்சே. இவரது மகள் ரோகிணி கட்சே முக்தாய் நகரில் போட்டியிட்டார். ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் சந்திரகாந்த் பாட்டீல் என்பவரிடம் தோற்றார்.
இதேபோல் மறைந்த பாஜக மூத்த தலைவரின் மகளான பங்கஜ் முண்டே பார்லி தொகுதியில் போட்டியிட்டார். இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தனஞ்செய் முண்டேவிடம் தோல்வி அடைந்தார்.












Click it and Unblock the Notifications