முக்கிய பதவி எதையும் விட்டுக்கொடுக்காத பாஜக.. மகனுக்கு துணை முதல்வர் போஸ்ட் கோருகிறார் ஷிண்டே
மும்பை: மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து மீண்டும் முதல்வராக ஆக ஷிண்டே முயற்சிக்க.. பாஜக கராறாக மறுத்திருக்கிறது. எனவே தனது மகனுக்கு அவர் துணை முதல்வர் பதவியை கோரியுள்ளார்.
தேசிய அளவில் மகாராஷ்டிரா மாநிலம் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக இருக்கிறது. எனவே இந்த மாநிலத்தில் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்கிற போட்டி சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் எழுந்தது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், புதிய முதல்வருக்கான போட்டியும் எழுந்திருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலிலும் பாஜக கூட்டணிதான் ஜெயித்திருந்தது. ஆனால், பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவசேனா (அப்போது ஒன்றுபட்ட கட்சியாக இருந்தது) தனித்து வந்து காங்கிரஸ்+தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்றியது.

இதனால் ஆட்சியை இழந்த பாஜக, சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. இங்குதான் ஷிண்டே முக்கிய பங்காற்றினார். அதாவது ஒன்றுபட்ட சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவராக ஷிண்டே இருந்து வந்தார். தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை வைத்திருந்த அவர், பாஜகவுடன் டீலிங்கை போட்டு, ஆதரவு எம்எல்ஏக்களை அழைத்துக்கொண்டு பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார். இதனால் உத்தவ்தாக்ரே சிவசேனா+காங்கிரஸ்+தேசியவாத காங்கிரஸ் கூட்டணியான மாக விகாடி அகாஸ் ஆட்சியை இழந்தது.
பாஜகவுக்கு ஷிண்டே செய்த உதவியால் அவருக்கு முதல்வர் பதிவி கொடுக்கப்பட்டது. இந்த பதவி குறித்து கடும் சண்டைகள் எழுந்திருந்தன. பாஜகவின் மூத்த தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் இருக்கும்போது ஷிண்டேவுக்கு எதுக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று சர்ச்சை வெடித்தது. ஆனாலும் ஃபட்னாவிஸை சமாதானப்படுத்திய பாஜக, அவருக்கு துணை முதல்வர் பதவியை கொடுத்து கூல் செய்தது.
ஆனால் இந்த முறை முதல்வர் பதவியை விட்டுத்தர பாஜக தயாராக இல்லை. ஃபட்னாவிஸ்தான் முதல்வர் என்று அடித்து கூறுகிறது. ஷிண்டே ஒப்புக்கொள்ளவே இல்லை. கடைசியில் ஓகே சொல்லிவிட்டு, உள்துறை அமைச்சர் பதவி எனக்கு வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். முதல்வர் பதவிக்கு பலமே, உள்துறை அமைச்சகம்தான். அதை தூக்கி கொடுத்துவிட்டு எங்க ஆளை டம்மி முதல்வராக உட்கார சொல்கிறீர்களா? என பாஜக காட்டமாக கேள்ளி எழுப்பி, ஷிண்டேவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
இதனால் அப்சட்டான ஷிண்டே பேச்சுவார்த்தையை கைவிட்டு விட்டு, தனது சொந்த கிராமத்திற்கு சென்றுவிட்டார். கடந்த 2 நாட்களாக அங்கு தங்கியிருந்த ஷிண்டே, இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மும்பை வந்திருக்கிறார். இந்த முறை சபாநாயகர் பதவியை சிவசேனாவுக்கு கேட்க இருக்கிறார். அதையும் பாஜக கண்டிப்பாக கொடுக்காது. எனவே, தனது மகனுக்கு துணை முதல்வர் பதவியையை கேட்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications