இலங்கை போல.. இந்தியாவிலும் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு தடை தேவை.. சிவசேனா கோரிக்கை
மும்பை: இந்தியாவில் இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிவதை தடை செய்ய வேண்டும் என, பிரதமர் மோடிக்கு சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், இது தொடர்பாக தலையங்க செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பர்தாவை பொது இடங்களில் அணிவதை தடை செய்ய, பிரதமர் மோடி முன்வர வேண்டும் என அந்த தலையங்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில், சுமார் 250 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இலங்கையில் பொது இடங்களில் பர்தா அணிவதை அந்நாட்டு அரசு தடை செய்தது.
இவ்விகாரத்தில் இலங்கையை பின்பற்றி பொது இடங்களில் பர்தா அணிவதற்கு, இந்திய அரசும் தடை விதிக்க வேண்டும் என சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது. முத்தலாக் மட்டுமே தடை செய்யப்பட வேண்டியது அல்ல, பர்தா அணிவதும் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
ராவணனின் நாடு எனப்படும் இலங்கை அரசு பர்தாவிற்கு தடை விதித்துள்ள போது, ராமனின் நாடான இந்தியாவில் ஏன் பர்தாவிற்கு தடை விதிக்க முடியாது
முகமூடிகள் அல்லது பர்தாக்களை அணிந்து வரும் மக்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். அவசர கால சமயங்களில் பாதுகாப்பு படையினர் பொதுமக்களை எளிதாக அடையாளம் காண பர்தாவிற்கு தடை விதிக்கப்பட்டால் உதவிகரமாக இருக்கும் என்றும் சிவசேனா கூறியுள்ளது.
சிவசேனாவின் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, பர்தா அணியும் அனைத்து பெண்களும் பயங்கரவாதி இல்லை. அது அவர்களின் பாரம்பரியம், அவர்களுக்கு பர்தா அணிய உரிமை உள்ளது. இந்தியாவில் பர்தா அணிவதற்கு எந்த தடையும் இருக்காது என்றார்.
இதனிடையே எப்போதும் சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பதை வழக்கமாக கொண்ட சாத்வி பிரக்யா, சிவசேனாவின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியாவின் சமாதானத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது என கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications