அந்த கொரோனா மட்டும் என் கையில கெடச்சா.. அப்படியே எடுத்து பட்னவீஸ் வாய்ல போட்ருவேன்.. சிவசேனா எம்எல்ஏ
மும்பை: இந்த கொரோனா கிடைத்தால் எடுத்து அப்படியே தேவேந்திர பட்னவீஸ் வாயில் போட்டுவிடுவேன் என புல்தானா சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் சர்ச்சைக்குரியவகையில் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் 2ஆவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. முதல் அலையிலும் சரி இரண்டாவது அலையிலும் சரி மகாராஷ்டிரா மாநிலத்தைவிட்டு கொரோனா போவதாக தெரியவில்லை.
தான் பிறந்த சீனாவை விட்டு கூட கொரோனா வெளியே வந்துவிட்டது. ஆனால் மகாராஷ்டிரா மீது ஏன் இத்தனை "பற்று" என கேட்கும் அளவுக்கு அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
உலக நாடுகளை ஒப்பிட்டால்.. இந்தியாவில் கொரோனா டெஸ்ட் ரொம்ப குறைவு.. பாருங்க லிஸ்டை
கொரோனா அலை
இந்த நிலையில் நாடு முழுவதும் 2-ஆவது கொரோனா அலை உருவாக மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் காரணம் என சிவசேனா குற்றம்சாட்டி இருந்தது. இந்த நிலையில் புல்தானா சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் மாநில முதல்வருமான தேவேந்திர பட்னவீஸ் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
முயற்சிகள்
இதுகுறித்து அவர் கூறுகையில் அரசியல் செய்ய இதுதான் நேரமா, இது போன்ற துயரங்களில் அரசியல் செய்ய பிரதமர் மோடியும் தேவேந்திர பட்னவீஸ் மகாராஷ்டிர முதல் முதல்வராக இருந்தால் மோடி இப்படி செய்வாரா? எங்கள் அரசு தோல்வி அடைந்ததாக காட்ட முயற்சிகள் நடைபெறுகின்றன.
அப்பாவி மக்கள்
ஆனால் அந்த முயற்சியில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். நோய் பரவலை கட்டுப்படுத்த அனைத்து அமைச்சர்களும் கடுமையாக உழைத்து வரும் போது எதிர்க்கட்சியினர் உதவி செய்வதை விட்டுவிட்டு எங்களது முயற்சிகளை கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அதிர்ச்சி
ஒரு வேளை எனது கையில் கொரோனா வைரஸ் கிடைத்தால் அதை தேவேந்திர பட்னவீஸ் வாயில் போடுவேன். அந்த அளவுக்கு நான் அவரை வெறுக்கிறேன் என கெய்க்வாட் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலில் முதல் இடத்தில் இருக்கும் ஒரு மாநில எம்எல்ஏ இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.