இந்தியாவில் கொரோனாவுக்கு 99 மருத்துவர்கள் பலி.. 1302 பேர் பாதிப்பு
மும்பை: இந்தியாவில் 99 மருத்துவர்கள் கொரோனா வைரஸுக்கு பலியாகிவிட்டதாகவும் 1302 மருத்துவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த தொற்றுக்கு பொதுமக்கள் என இல்லாது நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்களை சந்திக்கும் அரசியல்வாதிகள் என அனைவருக்கும் வைரஸ் தொற்று ஏற்படுகிறது.

இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் என உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த நிலையில் இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு 99 மருத்துவர்கள் பலியாகிவிட்டதாகவும் 1302 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு கூறுகையில், சுகாதார பணியாளர்களுக்கு நோய் பாதிப்பு குறித்த டேட்டாபேஸை உருவாக்கியுள்ளோம். மருத்துவர்களின் இறப்பு வீதம் 8 சதவீதமாக உள்ளது. மாநிலங்களிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் டாக்டர்கள் இறப்பு எண்ணிக்கை 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.
50 வயதுக்கு மேற்பட்ட மருத்துவர்கள் 74 சதவீதம் பேர் பலியாகிவிட்டனர். 35 முதல் 50 வயதுடைய மருத்துவர்கள் 19 சதவீதம் பேர் இறந்துள்ளனர். 35 வயதுக்குக் கீழ் 7 மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டனர். 1302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 586 பேர் தனியார் மருத்துவர்கள், 566 பேர் வீட்டில் கிளினீக் வைத்தவர்கள், 150 பேர் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆவர்.
மும்பையில் 1000-க்கும் மேற்பட்ட சுகாதாரத் துறை பணியாளர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த நகரில் 9 மருத்துவர்கள் இறந்துள்ளனர். பாதுகாப்பு உபகரணங்களின் விலை உயர்ந்துள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகள் கோவிட் சென்டர்களாக மாற்ற தகுதியில்லாதவைகளாக உள்ளன என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications