ஸ்டேன் சுவாமி மரணத்தை கண்டித்து.. எல்கர் பரிஷத் வழக்கில் கைதான 10 பேர் சிறையில் உண்ணாவிரதம்
மும்பை: தலோஜா சிறைச்சாலையில் பாதிரியார் ஸ்டேன் சுவாமி உயிரிழந்த நிலையில், இது நிறுவன கொலை என்று கூறி கண்டித்து எல்கர்-பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கைதிகள் 10 பேர், நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்துள்ளனர்.
எல்கர் பரிஷத் வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்த கைதிகள் வலியுறுத்தினர். மேலும் தலோஜா சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் கெடுபிடி தொடர்பாக புகார் தெரிவித்து அவர்கள் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Recommended Video
2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஞ்சி நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் ஸ்டேன் சுவாமி . பின்னர் ஜாமீன் கேட்டு அவர் பல நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தார். உடல் நலக்குறைவுக்கு சிகிச்சையளிக்க வலியுறுத்தியும் மனு தாக்கல் செய்தார். ஆனால், மனு விசாரணையில் இருக்கும் போது உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications