உன் நண்பனுடன் சொர்க்கத்தில் இணைந்துவிட்டாய்!.. சுஷாந்த் சிங்கின் வளர்ப்பு நாய் மரணம்.. தங்கை வேதனை
மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் வளர்ப்பு நாய் அவர் இறந்து 3 ஆண்டுகள் கழித்து இறந்துவிட்டது. இந்த சோக சம்பவம் குறித்து அவருடைய சகோதரி உருக்கமான கருத்தை பதிவு செய்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பை பாந்த்ராவில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது ஒட்டு மொத்த திரையுலக ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இவரது மரணம் இயற்கையானது இல்லை என அவரது தந்தை போலீஸில் புகார் அளித்திருந்தார். மேலும் நடிகை ரியா சக்கரவர்த்திதான் காரணம் என்றும் அவர்தான் தனது மகனுக்கு ஸ்லோ பாய்சன் விஷத்தை கொடுத்தார் என்றும் புகார் கூறினார்.

ரியா சக்கரவர்த்தி
இதையடுத்து ரியா சக்கரவர்த்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுஷாந்த் சிங் மரணமடைந்து 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் அவருடைய மரணம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. குறிப்பாக சுஷாந்த் சிங்கின் உடலை உடற்கூறாய்வு செய்த ரூப் குமார் என்பவர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்ளவில்லை என பரபரப்பை கிளப்பினார்.

கொலை
இதையடுத்து அவர் கொலை செய்யப்பட்டதாகவும் அவரது கழுத்திலும் உடலிலும் காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். சுஷாந்தின் உடலை பார்த்ததுமே அது கொலை என ரூப்குமார் கண்டறிந்ததாகவும் ஆனால் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்த போது அவர்கள் போட்டோ மட்டுமே எடுக்கச் சொன்னதாகவும் கூறியிருந்தார்.

பிரேத பரிசோதனை
பொதுவாக பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும். ஆனால் தன் உயரதிகாரிகள் போட்டோ மட்டும் எடுக்கச் சொன்னார்கள். நானும் அவ்வாறே செய்து பின்னர் சுஷாந்தின் உடலை போலீஸில் ஒப்படைத்துவிட்டேன் என ரூப்குமார் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சுஷாந்த் சிங்கின் வளர்ப்பு நாய்
இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் வளர்ப்பு நாய் ஃபட்ஜ் உயிரிழந்துவிட்டதாக சுஷாந்தின் தங்கை பிரியங்கா சிங் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நீண்ட தூரம் சென்றுவிட்டாய்! உன் நண்பருடன் (சுஷாந்த்) சொர்க்க பூமிக்கு சென்றுவிட்டாய்! நான் உன்னை பின்தொடர்ந்து வருகிறேன். அது வரை மிகுந்த மனவேதனையுடன் இருப்பேன் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ரசிகர்களும் சுஷாந்தின் நாய் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications