எனக்கு ஏதாவது ஆச்சுன்னா.. அதற்கு நானா படேகர்தான் பொறுப்பு!இன்ஸ்டாவில் தனுஸ்ரீ தத்தா பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

மும்பை: எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு நடிகர் நானா படேகர்தான் பொறுப்பு என நடிகை தனுஸ்ரீ தத்தா பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஒரு படத்தின் பாடல் காட்சியின்போது தன்னுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்த நடிகர் நானா படேகர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தனுஸ்ரீ குற்றம்சாட்டினார்.

மோசமான நடன அசைவுகள் மூலம் நடன கலைஞர் கணேஷ் ஆச்சார்யாவும் தனக்கு பாலியல் துன்புறுத்தலை கொடுத்தார் என புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் குறித்து தொடர்ந்து பல்வேறு புகார்களை கூறியுள்ளார் தத்தா.

நானா படேகர்

நானா படேகர்

இதையடுத்து நானா படேகர், தனுஸ்ரீ தத்தா மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் இவர் நானா படேகருக்கு எதிராக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள பதிவு பரபரப்பை எழுப்பியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு காரணம் மீ டூ புகாரில் சிக்கிய நானா படேகர்தான்.

வழக்கறிஞர்கள்

வழக்கறிஞர்கள்

அவருடன் அவரது வழக்கறிஞர்கள், பாலிவுட் மாஃபியா நண்பர்கள் ஆகியோரும் பொறுப்பாவார்கள். பாலிவுட் மாஃபியாக்கள் யாரென்றால் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணத்திற்கு காரணமானவர்கள்தான் இந்த மாஃபியாக்கள். இந்த மாஃபியாக்கள் அனைவரும் ஒவ்வொரு கிரிமினல் வழக்கறிஞர்களை அமர்த்தியுள்ளார்கள்.

தவிர்த்துவிடுங்கள்

தவிர்த்துவிடுங்கள்

அவர்களுடைய திரைப்படங்களை பார்க்காதீர்கள். அவர்களை ஒட்டுமொத்தமாக தவிர்த்துவிடுங்கள். எனக்கு எதிராக பலர் பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள். என்னை துன்புறுத்தியதால் அவர்களின் வாழ்வு நரகமாகிவிட்டது. சட்டமும் நீதியும் எப்போதும் தோற்காது. ஏனென்றால் நான் இந்த நாட்டு மக்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். ஜெய்ஹிந்த் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜூலை 19 ஆம் தேதி புகார்

ஜூலை 19 ஆம் தேதி புகார்

இது போல் ஏற்கெனவே ஜூலை 19 ஆம் தேதி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனுஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருக்கையில் நான் மிகவும் மோசமாக துன்புறுத்தப்படுகிறேன். நான் மோசமாக குறி வைக்கப்படுகிறேன்.யாராவது ஏதாவது செய்யுங்கள். கடந்த ஆண்டு எனது பாலிவுட் பணிகளை நாசமாக்கினர். என் வீட்டு தண்ணீரை மருந்துகள், ஸ்டீராய்டுகள் கலந்து என் உடல்நலனை பாதிக்க வைக்க ஒரு பெண் பணியாளரை திட்டமிட்டு அனுப்பியிருந்தார்கள்.

வீட்டு வேலைக்கு

வீட்டு வேலைக்கு

ஆனால் அந்த பெண்யாரோ சொல்லி என் வீட்டு தண்ணீரில் மருந்துகளை கலந்து வைத்துள்ளார். இதனால் எனது உடல் நலனுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த மே மாதம் நான் உஜ்ஜைனிக்கு தப்பி சென்றேன். அப்போது இரு முறை எனது வாகனம் சேதப்படுத்தப்பட்டு விபத்துக்குள்ளானது. கடவுள் புண்ணியத்தில் மரணத்திலிருந்து தப்பினேன். பின்னர் 40 நாட்கள் கழித்து எனது பணிகளை கவனிக்க மீண்டும் மும்பைக்கே வந்துவிட்டேன். இதற்கெல்லாம் அஞ்சி நான் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன் என தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+