மொத்தமாக உயிரிழக்கும் விமானிகள்.. தடுப்பூசியில் முன்னுரிமை வழங்கணும்.. ஐகோர்ட் கதவை தட்டிய விமானிகள்
மும்பை: கொரோனாவுக்கு உயிரிழந்த விமானிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்ககோரி இந்திய விமானிகள் கூட்டமைப்பு மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டம் காட்டி வரும் கொரோனா வைரஸ் பல்வேறு உயிர்களை காலி செய்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொடர்பான பணியில் விமானிகள், விமான பணியாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

விமானிகளின் பெரும் பணி
இந்தியாவில் விமான போக்குவரத்து இன்னும் முழுமையாக சீரடையாத நிலையில், கொரோனா முதல் அலையில் வெளிநாடுகளில் பரிதவித்த இந்தியர்களை சிறப்பு விமானங்கள் இயக்கி வந்தே பாரத் திட்டத்தின் மூலம் அழைத்து வந்துள்ளனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சை பொருட்கள் கொண்டு வருதல் ஆகிய பணிகளில் ஓய்வின்றி விமானிகள் உழைத்து வருகின்றனர்.,

17 விமானிகள் உயிரிழப்பு
இப்படி கடுமையாக உழைக்கும் விமானிகள் பலர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். கடந்த மே மாதத்தில் மட்டும் சுமார் 17 விமானிகள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் விஸ்டாரா ஆகிய நிறுவனங்களை சார்ந்த விமானிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதில் இண்டிகோ விமானிகள் 10 பேரும், விஸ்டாரா விமானிகள் 2 பேரும் அடங்குவார்கள்.

ஏர் இந்தியா விமானிகள்
ஏர் இந்தியா மூத்த விமானிகள் மட்டும் 5 பேர் இறந்துள்ளனர். தொடர்ந்து விமானிகள் கொரோனாவுக்கு பலியாகி வருவதால் ''விமானிகள் மட்டுமின்றி அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா தடுப்பூசிபோட முன்னுரிமை அளிக்க வேண்டும்'' என்று இந்திய விமானிகளின் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு
இந்த நிலையில் உயிரிழந்த விமானிகளுக்கு இழப்பீடு வழங்ககோரியும், தடுப்பூசிக்கு முன்னுரிமை வழங்கும்படியும் இந்திய விமானிகளின் கூட்டமைப்பு மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில், ' விமானிகள் நாட்டுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகின்றனர்.

ரூ.10 கோடி நிவாரண தொகை
இதில் பலர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்த விமானிகளின் குடும்பங்களுக்கு ரூ.10 கோடி நிவராண தொகை வழங்க வேண்டும். விமானிகளை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்துவதற்கு விமானிகளுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications