சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு! இந்துக்களை பிளவுபடுத்துவதாக சாடல்
மும்பை: மகாராஷ்டிராவில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று, துணை முதலமைச்சர் அஜித் பவார் பேசியிருப்பது கூட்டணி கட்சியான பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலிலும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிதான், மீண்டும் பிரதமர் வேட்பாளராக பாஜகவால் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார். எனவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், நேருவுக்கு பின் தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்கும் தலைவர் என்கிற வரலாற்று பெருமையை மோடி பெறுவார்.

மட்டுமல்லாது, 2025ம் ஆண்டு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸின் நூற்றாண்டு வருகிறது. இதனை சிறப்பாக கொண்டாட பாஜக ஆட்சியில் இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே இந்த தேர்தலை பாஜக மிகவும் கவனமாக அணுகி வருகிறது. ஆனால் பாஜகவின் திட்டங்களுக்கும், முயற்சிகளுக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி, 'ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு' மூலம் வெடி வைத்திருக்கிறது.
இந்தியாவை பொறுத்த அளவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 1872ம் ஆண்டு தொடங்கியது. இந்த கணக்கெடுப்பில் சாதி வாரியாகவும் மக்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது. அப்போது முதல் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியாக 1941ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அப்போது இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் அந்த கணக்கெடுப்பு வெளியிடப்படவில்லை. எனவே 1931ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பே இறுதியானதாகும்.
அதன் பின்னர் நாடு சுதந்திரமடைந்த நிலையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. கடந்த 2010ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சமூக, பொருளாதார சாதிக் கணக்கெடுப்பை நடத்தியது. ஆனால் 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக, இந்த கணக்கெடுப்பில் பல்வேறு தவறுகள் இருப்பதாக கூறி இதன் விவரங்களை வெளியிடவில்லை. எனவே, 1931ம் ஆண்டு நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்கள் எவ்வளவு பேர் இருந்தார்களோ, அதன் அடிப்படையில்தான் தற்போது வரை இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
1931க்கும் 2023க்கும் ஏறத்தாழ நூற்றாண்டு இடைவெளி இருப்பதால், இந்த காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகை அதிகரித்திருக்கும். எனவே கூடுதல் இடஒதுக்கீடு வழங்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதில் டிவிஸ்ட் என்னவெனில் பாஜக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளும் கூட இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளன. அப்படித்தான் மகாராஷ்டிராவின் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அஜித் பவார் இந்த கோரிக்கையை தீவிரமாக எழுப்பியுள்ளார்.
இதற்கு ஆர்எஸ்எஸ் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஸ்ரீதர் காட்கே இது குறித்து கூறுகையில், "சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு ஜாதிகள்தான் காரணம். குறிப்பிட்ட காலத்திற்குள் சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி, அம்பேத்கர் உள்ளிட்டோர் கூறியுள்ளனர். அதன்படி ஜாதிகளை ஒழிப்பதில் தீவிரம் காட்டுவதை விட்டுவிட்டு, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோருவது முரண்பாடானதாக இருக்கிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பு ஜாதி அமைப்பை நிலைநிறுத்தும். பிரச்னைகளை அதிகரிக்கும்" என்று கூறியுள்ளார்.
பாஜக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தயக்கம் காட்டி வரும் நிலையில், அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் இதற்கு எதிராக பேசுவதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மாஸ் வைத்து ஜெயிக்க முடியாதுங்க.. அண்ணாமலையை சீண்டிய குஷ்பு.. பாஜகவில் வெடித்த மோதல் -
காங்கிரஸை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும்.. அதிமுகவிடம் மல்லுக்கட்டும் பாஜக.. எவ்வளவு சீட் தெரியுமா? -
ஜெயலலிதா இருந்தா இப்படி நடக்குமா? மொத்தமாக கண்ட்ரோலை எடுத்த பாஜக..லிஸ்டோடு டெல்லிக்கு ஓடிய எடப்பாடி! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
நிதிஷ் குமாரின் நிலை எடப்பாடிக்கும் வருமா.. ஸ்டாலின் கவலைப்பட தேவையில்லை.. நயினார் நாகேந்திரன் பதில் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications